பாலிடெக்னிக் கல்லுாரி, மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் எப்போது துவங்கப்படும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
கோவையைச் சேர்ந்த, பாலசுப்ரமணியன் என்பவர் தாக்கல் செய்த மனு: என் மகன் வருண்குமார், 'ஸ்நுாக்கர்' விளையாட்டில் ஆர்வமாக இருந்ததால், 10ம் வகுப்பு படிப்பை, பாதியில் நிறுத்தி விட்டார். தனியாக படித்து, தனித்தேர்வு எழுத, ஹால் டிக்கெட் பெற்றார். செய்முறை தேர்விலும் பங்கேற்றார். இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டு, 'அனைவரும் பாஸ்' என, அறிவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு தேர்வு எழுத, ஹால் டிக்கெட் பெற்ற தனி தேர்வர்களுக்கு, தேர்ச்சி பற்றி அறிவிக்கவில்லை.
இதற்கிடையில், நாளை மறுதினம் முதல், மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கை நடக்கும் என, அரசு அறிவித்துள்ளது. ஆனால், எந்த முடிவும் தெரியாமல், தனித்தேர்வர்கள் உள்ளனர். மாணவர்கள் மத்தியில், அரசு பாகுபாடு காட்டுவதாக உள்ளது. என் மகன் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கும்படி, அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை.
எனவே, தனி தேர்வர்களுக்கான முடிவு அறிவிக்கும் வரை, மேல்நிலைப்பள்ளி மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், மாணவர்கள் சேர்க்கையை தள்ளி வைக்கும்படி உத்தரவிட வேண்டும். தனி தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவித்து, மதிப்பெண் பட்டியல் வழங்க வேண்டும். இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஹேமலதா அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மேல்நிலை பள்ளி வகுப்புகள், பாலிடெக்னிக் கல்லுாரிகள் எப்போது துவங்கப்பட உள்ளது என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். விசாரணையை, வரும், 25ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்த அரசு பள்ளிகளை திறந்தால் பணிநியமனம் போடணும் கொரோனவை
ReplyDeleteவைத்தே இந்தகல்வியாண்டை வீணடிக்குது
10&12
சுயற்சி முறையிலாவது பள்ளிகளைதிறக்கலாம்
Village la corona problem athikam illa so village school open pannalam next city side open pannalam
ReplyDeleteinda varsam 10 all pass poeta nalla. Irukkum online class padikuradula Suttamaa intrestae illa
ReplyDeleteசீக்கிரம் திறங்கள்.. குடும்பக் கதை, புறணி பேசி குடுமிபிடி சண்டை போடாமல் தூக்கம் வராது தவிக்கிறார்கள். நாட்டாமைகள் மற்றும் பரட்டை தலைச்சிகள்.
ReplyDelete