தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உண்டா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 22, 2020

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மாணவர் சேர்க்கை உண்டா?

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில், புதிய வகுப்புகளுக்கு மாணவர் சேர்க்கை உண்டா என்பது குறித்து, பள்ளி கல்வித் துறை அறிவிக்காததால், குழப்பம் ஏற்பட்டுள்ளது.


புதிய கல்வி ஆண்டு துவங்கி விட்ட நிலையில், கொரோனா தொற்று காரணமாக, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.அதேநேரம், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், புதிய மாணவர் சேர்க்கையை மேற்கொள்ள, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 


அனைத்து பள்ளிகளிலும், இம்மாதம், 17ம் தேதி முதல், மாணவர் சேர்க்கை நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.இதன்படி, ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. புதிய மாணவர்கள் சேர்ந்தவுடன், அவர்களுக்கு, இலவச பாட புத்தகம், நோட்டு புத்தகம், புத்தகப்பை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகின்றன.இந்த மாணவர் சேர்க்கையை, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டுமா என்பது குறித்து, பள்ளி கல்வி துறை எதுவும் அறிவிக்கவில்லை.


இது குறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது: புதிய கல்வி ஆண்டின் போது, தலா, 50 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் தரம் உயர்த்தப்படும் என, தமிழக சட்டசபையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.அந்த பள்ளிகள் எவை; உயர்நிலை பள்ளியாக மாறும் நடுநிலை பள்ளிகளில், ஒன்பதாம் வகுப்பிலும்; மேல்நிலை பள்ளியாக மாறும் உயர்நிலை பள்ளியில், பிளஸ் 1 வகுப்பிலும் எத்தனை இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றில், எப்போது மாணவர் சேர்க்கை நடக்கும் என, தெளிவான அறிவிப்பை வெளியிட வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

1 comment:

  1. 50 பள்ளிகளை உயர்நிலைப்பள்ளியாகவும் 50 பள்ளிகளை மேல் நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரிக்கும். 200 இடங்களே உள்ள நிலையில் 700 பேர் அரசு பள்ளியில் சேர்க்கைக்காக வந்து 500 பேர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அவர்களுக்கு நல்ல வாய்ப்பு அளிக்க விரைவில் அரசானது எந்தெந்த பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் என அறிவிக்கலாம்.இது அனைவருக்கும் மிக உதவியாக இருக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி