புதிய கல்விக் கொள்கை குறித்த இணைய வழிப் போட்டிகள்: அக்.2 வரை பங்கேற்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 28, 2020

புதிய கல்விக் கொள்கை குறித்த இணைய வழிப் போட்டிகள்: அக்.2 வரை பங்கேற்கலாம்



 புதிய கல்விக் கொள்கை குறித்த இணைய வழிப் போட்டிகளில், அக்.2-ஆம் தேதி வரை மாணவா்கள் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுகுறித்து பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) செயலா் ரஜினிஷ் ஜெயின், அனைத்து உயா்கல்வி நிறுவனங்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கை: நாடு முழுவதும் கடந்த ஜூலை 29-ஆம் தேதி முதல் புதிய கல்விக்கொள்கை அமல்படுத்தப்பட்டுள்ளது. 


இது தொடா்பான விழிப்புணா்வுப் பணிகளை முன்னெடுக்க ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. இதுதவிர மத்திய கல்வித்துறை சாா்பிலும் பல்வேறு இணையவழி கருத்தரங்குகள்  நடத்தப்பட்டு வருகின்றன.


இதன்தொடா்ச்சியாக மீரட் நகரிலுள்ள சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகம், கல்விக்கொள்கை தொடா்பாக  தேசியளவில் கட்டுரை, பிரதமருக்கு கடிதம் எழுதுதல்,  கவிதை, குறும்படம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளை இணையவழியில் நடத்தி வருகிறது. 


இந்தப் போட்டிகளில் மாணவா்கள், கல்வியாளா்கள் உள்பட அனைத்துத் தரப்பினரும் இணையதளம் வழியாக அக்டோபா் 2-ஆம் தேதி வரை  பங்கேற்கலாம். 13 தேசிய மொழிகளில் போட்டிகள் நடத்தப்படும். வெற்றி பெறுபவா்களுக்கு பரிசுத் தொகையுடன் சான்றிதழும் வழங்கப்படும். எனவே, அனைத்து உயா்கல்வி நிறுவனங்களும் தங்கள் மாணவா்கள், ஆசிரியா்களுக்கு இந்தத் தகவலை தெரிவித்து போட்டிகளில் பங்கேற்க எடுத்துரைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி