இளநிலை யோகா மற்றும் இயற்கை மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க, வரும் 15ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
யோகா மற்றும் இயற்கை மருத்துவப் படிப்புக்கு, சென்னை அரும்பாக்கம் அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லுாரியில், 60 இடங்களும்; ஒன்பது தனியார் கல்லுாரிகளில், 600க்கும் மேற்பட்ட இடங்களும் உள்ளன. தனியார் கல்லுாரிகளில் இருந்து அரசுக்கு, 65 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. இந்த பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பம், ஆக., 3ல் துவங்கியது. விண்ணப்பத்தை, www.tnhealth.tn.gov.in என்ற இணையதளத்தில், ஆக., 28 வரை பதிவிறக்கம் செய்யவும், ஆக., 31 வரை சமர்ப்பிக்கவும், அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
தற்போது, விண்ணப்பத்தை பதிவிறக்க, வரும் 12ம் தேதி மாலை, 5:00 மணி வரையும்; சமர்ப்பிக்க, வரும், 15ம் தேதி வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி