பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் கட்டாயமில்லை என பள்ளிக்கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் தெரிவித்துள்ளார்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், ஜூலை 29ஆம் தேதி தமிழக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை தனியார் பள்ளிகள் பின்பற்றுவதை கண்காணிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளுக்கு வரும் மாணவர்களின் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை ஆசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும், மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளுக்கு கட்டாயப்படுத்தக் கூடாது.
இணைய வழி வகுப்புகளுக்கான வருகைப் பதிவேடு அல்லது மதிப்பெண்களை தனித்தனியாக கணிக்கிடுவது கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளார்.
அனைத்து பள்ளிகளிலும் ஆன்லைன் வகுப்புகளை கண்காணிக்க ஆலோசகர்களை நியமிக்க வேண்டும் என்றும், வகுப்புகள் கட்டாயம் எனக் கூறும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பள்ளிக் கல்வித்துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
அம்மா... ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு பற்றி ஏதாவது சொல்லுங்க....
ReplyDeleteNext week
DeleteOnline classes for LKG to V standard are not suitable
ReplyDeleteபத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களயும் தேர்ச்சி என்று அறிவித்து விடலாமே ஏன் அவர்கள் மட்டும் என்ன பாவம் செய்தார்கள் பத்தாம் வகுப்பு தேர்வில் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்து ஆயிற்று லட்சக்கணக்கான மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று சொன்னவர்கள் ஏன் இந்த ஆயிரக்கணக்கில் உள்ள பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்கள் தேர்ச்சி என்று அறிவிக்கவில்லை இதில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மறுபிறவி எடுக்கும் மாணவர்கள் என பாவப்பட்ட மாணவர்கள் எவ்வளவு பேர் உள்ளனர் ஏன் இவர்கள் மீது தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்களும் பள்ளிக்கல்வித்துறை திரு ஐயா முதல்வர் அவர்களும் இவர்கள் மீது ஏன் கருணை காட்டக்கூடாது இவர்கள் அனைவரும் தேர்ச்சி என்று அறிவித்து விடலாமே
ReplyDelete