மதிப்பிற்குரிய ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் அவர்கள் , சென்னை , வணக்கம் ஐயா , ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்பெற்ற வட்டார கல்வி அலுவலர் ( BLOCK EDUCATIONAL OFFICER ) போட்டி தேர்வு முடிவை வெளியிட வேண்டி விண்ணப்பம். தற்போது ஊரடங்கு காலத்தில் , போட்டி தேர்வுக்கு என்று தயாரான போட்டியாளர்களும் , தனியார் பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களும் எந்த வித சம்பளம் மற்றும் வருமானமும் இல்லாமல் குடும்பமே வறுமையில் வாடி வருகிறோம். வேறு எந்த வேலையும் , வருமானமும் இல்லை. தற்போது ஊரடங்கு தளர்வில் மாவட்டங்களுக்குள் சென்று வர அனுமதி இருப்பதால் , தாங்கள் சான்றிதழ் சரிபார்ப்பு பணியை எப்போதும் மேற்கொள்ளும் , மாவட்ட தலைமை கல்வி அலுவலகம் ( CHIEF EDUCATIONAL OFFICE ) வழியாகவே மேற்கொண்டு , பணி ஆணைகளையும் வழங்கலாம். ஆகவே இந்த நியாயமான கோரிக்கையை ஏற்றுக் கொண்டு , வட்டார கல்வி அலுவலர் ( BLOCK EDUCATIONAL OFFICER ) போட்டி தேர்வு முடிவை விரைவில் வெளியிடுமாறு சமூகம் அவர்களை கேட்டுக்கொள்கிறோம்.
Sep 21, 2020
1 comment:
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி
Subscribe to:
Post Comments (Atom)
Eppadi irundhalum election appo posting poduvanga nnu theintha unmai...pinna eppo results vanthal enna..???
ReplyDelete