கல்லூரி பருவத் தேர்வுகளை மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 11, 2020

கல்லூரி பருவத் தேர்வுகளை மார்ச் மாதத்துக்குள் முடிக்க திட்டம்.

 


தமிழகத்தில் கல்லூரிகளை நவ.16-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதித்துள்ளது. எனினும், கரோனா 2-வது அலை, வடகிழக்கு பருவமழை தீவிரம் காரணமாக கல்லூரிகள் திறப்பை தள்ளிவைக்க மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக துறை அமைச்சர்கள் மற்றும் நிபுணர் குழுக்களுடன் முதல்வர் பழனிசாமி நாளை(நவ.12) ஆலோசனை நடத்தவுள்ளார். அதன்பின் கல்லூரிகள் திறப்பு குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை அடுத்தஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டு வருகிறது. இதையடுத்துகல்லூரி பருவத்தேர்வுகளை மார்ச்மாதத்துக்குள் நடத்த உயர்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

தேர்தல் மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் எனவும், அதற்கு கூடுமானவரை கல்லூரிகளையே தேர்வு செய்யவும் அரசு முடிவு செய்துள்ளது. மேலும்,கல்வி ஆண்டு கால அட்டவணைதிருத்தப்பட உள்ளதாகவும் துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி