மருத்துவ படிப்பில், 7.5 சதவீத ஒதுக்கீட்டின்படி இடம் ஒதுக்க கோரிய, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்த மாணவனின் மனுவை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு தாலுகாவை சேர்ந்த, சங்கர் என்பவர் தாக்கல் செய்த மனு:என் மகன் சுரேந்தர், ௮ம் வகுப்பு வரை, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்தான். பின், பிளஸ் 2 வரை, அரசு பள்ளியில் படித்தான். பிளஸ் 2 தேர்வில், 457 மதிப்பெண்; 'நீட்' தேர்வில், 239 மதிப்பெண் எடுத்துள்ளான்.மருத்துவ படிப்பில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, 7.5 சதவீத ஒதுக்கீடு வழங்க, அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சதவீத அடிப்படையில் வெளியிடப்பட்ட வரிசைப் பட்டியலில், என் மகன், 54வது வரிசையில் உள்ளான். அரசு பள்ளி மாணவர்கள், 300 பேருக்கு, மருத்துவ படிப்பில் இடம் கிடைக்கும் என்பதால், என் மகனுக்கு உறுதியாக கிடைக்கும். அவன், 8ம் வகுப்பு வரை, அரசு உதவி பெறும் பள்ளியில் படித்ததால், தகுதி சான்றிதழ் கிடைக்கவில்லை.
கவுன்சிலிங்கில் கலந்து கொள்ள ஏதுவாக, தகுதி சான்றிதழ் பெறுவதற்கு விண்ணப்பிக்க, அனுமதி அளிக்கும்படி உத்தரவிட வேண்டும். மருத்துவ படிப்புக்கு, என் மகனை பரிசீலிக்க வேண்டும்.இவ்வாறு, மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன், விசாரணைக்கு வந்தது. கல்வித் துறை சார்பில், சிறப்பு பிளீடர் முனுசாமி ஆஜராகி, ''அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் படித்துள்ளதால், தகுதி சான்றிதழ் வழங்க முடியாது. அரசு வழங்கும், 7.5 சதவீத ஒதுக்கீடு சலுகையையும் பெற முடியாது,'' என்றார்இதையடுத்து, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் உத்தரவிட்டார்.
காசு இருந்தா தனியார் இல்லனா அரசு பள்ளியா
ReplyDeleteTNEB Accountant- Online class and
DeleteSTUDY MATERIALS AVAILABLE.
1. Unit wise study material
2. Concept wise explanation
3. Multiple choice questions
4. Answer with explanation
5. Total 1046 pages
Contact : ST.XAVIER'S ACADEMY,
NAGERCOIL, CELL:8012381919
காசு இருந்தா தனியார் இல்லனா அரசு பள்ளியா
ReplyDeleteகாசு இருந்தா தனியார் இல்லனா அரசு பள்ளியா
ReplyDeleteஅரசு உதவிபெறும் பள்ளி என்பதை கல்விசெய்தியே தனியார் பள்ளி என்கிறது
ReplyDeleteஆசிரியர்களை அடிமை படுத்தும் பள்ளி நிதிஉதவி பள்ளி, நிதிஉதவி சிறுபான்மையினரின் பள்ளிகளில் இந்திய அரசியல் அமைப்பு சட்டம் மக்களுக்கு கொடுத்த இட ஒதுக்கீடு இப்பள்ளிகளில் நடைமுறை படுத்துவதில்லை, சட்டத்தை மதிக்காதவர்களுக்கு எதற்கு எவ்ளோ ஆசை
ReplyDeleteஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் முறைகளையும் ஆசிரியர்கள் வழிநடத்தும் முறைகளையும் வைத்துப்பார்க்கும்போது சட்டம் தவறாக பயன்படுத்தபடுவது எல்லோருக்கும் தெளிவாக தெரிகிறது பிறகு ஏன் இந்த பள்ளிகளை அரசு பள்ளியாகவே மாற்றிவிடக்கூடாது
ReplyDeleteஅங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் அரசு தானே தருகிறது.
ReplyDeleteஇதையும் ஒரு சட்டமாக்குங்கள்..அரசு துறையில் பணியாற்றும் அனைத்து துறையினர் குழந்தைகள் அரசு பள்ளியில் சேத்து தொடர்ந்து படிக்கவைத்தால் மட்டுமே அரசு சம்பளம் வழங்கும் மற்றும் ஒவ்வொரு ஆண்டும் தலைமை ஆசிரியரிடம் குழந்தைகள் படிக்கும் உண்மைதன்மைக்கான சான்று சமர்பிக்க சொல்லுங்களேன் அனைவருக்கும் அரசு பள்ளிகளில் அனைத்து வசதிகளும் கிடைத்திடும்..
ReplyDelete