10 , 12 - ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள்_ஆசிரியர்கள் கருத்து. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 18, 2021

10 , 12 - ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள்_ஆசிரியர்கள் கருத்து.

10 , 12 - ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங் களை குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பது என் பது சிரமமான விஷயம் என ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் . குறைக்கப்பட்ட பாடங்கள் எவை ? 10 , 12 - ம் வகுப்பு மாணவர்க ளுக்கு நாளை ( செவ்வாய்க்கி ழமை ) முதல் பள்ளிகள் திறக் கப்படுகின்றன . கொரோனா நோய்த் தொற்று காரணமாக முழு பாடங்களையும் அவர் கள் கற்றுக்கொள்வது சிரமம் என்பதை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அறிவிப்பை நேற்று முன்தினம் அரசுவெளியிட்டு இருக்கிறது . அந்தவகையில் ஒவ்வொரு வகுப்பிலும் மொத்தமாக இவ்வளவு பாடத் தலைப்பு கள் குறைப்பு என்று இல்லா மல் , பாடப்பிரிவுகளில் இருக் கும் பாடத்தலைப்புகளின் உட்பகுதிகளில் சிலவற்றை யும் , மேலும் உயர்கல்வி படிப் புக்கு தேவை என கருதி சேர்க் கப்பட்டு இருந்த பாடங்களின் உட்பகுதிகள் சிலவற்றை யும் தான் குறைத்து இருக்கின் றனர் . மொத்தத்தில் மாண வர்களின் கற்றல் விளைவு களில் எந்த பாதிப்பும் ஏற் பட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில் பாடக் அறைப்பு செய்யப்பட்டுள்ள காககல்வித்துறை வட்டாரங் கள் தெரிவிக்கின்றன . ஆசிரியர்களின் கருத்துகள் குறைக்கப்பட்டு இருக்கும் பாடங்களை நடத்தி முடிக்க முடியுமா ?, மாநில கல்வியி பல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவுறுத்தலின்படி நேரம் இருந்தால் கூடுதல் பாடங்களையும் நடத்த முடி யுமா ?, மாணவர்கள் அதனை எளிதில் கற்றுக்கொள்வார் களா ? என்பது குறித்து ஆசிரி யர்களிடம் கேட்டபோது , அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு : இந்த அளவுக்கு பாடங்கள் குறைப்பு என்பது ஏற்றுக் கொள்ள கூடியது தான் . ஆனால் பொதுத்தேர்வு சற்று தாமதமாக தொடங்கினால் மாணவர்களுக்கு பாடங் களை நடத்தி முடிப்பது என்பது சாத்தியப்படும் . இல்லை யென்றால் குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பது சிரமம் . கடினமான பாடங்கள் எதையும் நீக்கவில்லை . எளி தாக மாணவர்கள் மதிப் பெண் எடுக்கக்கூடிய சில பாடங்களை நீக்கி இருப்பது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு . மாணவர்களுக்கு எது கஷ்டமோ ? அதை குறைக்காமல் , மற்றவற்றை குறைத்து இருக்கிறார்கள் . எளிதான காரியம் அல்ல குறுகிய நேரத்தில் பாடங் களை நடத்தி மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வது என்பது கடினம் . ஓரளவுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கட் பட்டுள்ளன . இருந்தாலும் அவற்றை 3 மாதங்களுக்குள் நடத்தி முடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல . இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர் . தனியார் பள்ளி ஆசிரியர் கள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் பாடத்திட்டங்களை ஓரளவு நெருங்கிவிட்டார் கள் . அவர்களை பொறுத்தவ ரையில் இந்தபாடக்குறைப்பு ஏற்றுக்கொள்ளப்படுகிறது .




1 comment:

  1. எந்நிலையிலும் எவ்வகையிலும் மாணவர்களுக்கு துணையாகவும் தூணாகவும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நாங்கள் இருக்கிறோம்....மனம் நிறைந்த அன்போடும் நம்பிக்கையோடும் வரவேற்கிறோம் இந்த கல்வியாண்டை....
    தனியார் பள்ளிகளிலும் 100% வருகை இல்லை..அங்கும் முதலிருந்து நடத்தியாகவேண்டிய சூழ்நிலையே...
    மாணவர்கள் ஆசிரியர்களுக்கு இக்கல்வியாண்டு சிறக்க வாழ்த்துக்கள்....

    மகிழ்ச்சியோடு எதிர்கொள்வோம்....
    நமக்கு முன்னிருக்கும் இந்த சவாலை....

    கல்விச்செய்தி ரசிகை
    அரசுப் பள்ளி ஆசிரியை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி