தலைமை ஆசிரியர்களை இடம் மாற்ற உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 11, 2021

தலைமை ஆசிரியர்களை இடம் மாற்ற உத்தரவு.

 

தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களை, கவுன்சிலிங் வாயிலாக இடமாறுதல் செய்ய வேண்டும்' என, பள்ளிக்கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.


முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளி கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர், பொன்னையா அனுப்பிஉள்ள சுற்றறிக்கை:நடப்பு, 2020 - -21ம் கல்வியாண்டில், 40 அரசு உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. எனவே, தரம் உயர்த்தப்பட்டுள்ள உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்களை, வேறு பள்ளிக்கு மாறுதல் வழியே நியமனம் செய்ய வேண்டும்.


இதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், 40 உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும்,இடமாறுதல் கவுன்சிலிங்கை விதிகளின்படி நடத்த வேண்டும். மாவட்டங்களில் காலியிடம் இல்லாவிட்டால், வேறு மாவட்டத்துக்கு, மாறுதல் வழங்குவதற்கான விண்ணப்பத்தை பெற்று, இயக்குநரகத்துக்கு அனுப்ப வேண்டும். மாறுதல் பெறுவோர், உடனே பணியில் சேர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி