பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் பள்ளிகள் செயல்படுமா என்பதை, பள்ளி கல்வி துறை அறிவிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொரோனா பரவலை தடுக்கும் வகையில், பிளஸ் 2 தவிர மற்ற வகுப்புகளுக்கு, காலவரைm யின்றி விடுமுறை விடப்பட்டுள்ளது.கல்லுாரிகள், பல்கலைகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களிலும், இன்றைக்குள் நேரடி வகுப்புகள் மற்றும் நேரடி தேர்வுகளை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் நடந்து வருகின்றன. பள்ளிகளில் ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பிளஸ் 2வுக்கு விடுமுறை விட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.மேலும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டு, சட்டசபை தேர்தலுக்கு பிறகும், மாணவர்கள் நேரடியாக பள்ளிக்கு வரலாமா அல்லது 'ஆன்லைன்' வழியில் தான் படிக்க வேண்டுமா என, பள்ளிக் கல்வித் துறை இன்னும் விளக்கம் அளிக்கவில்லை.
எனவே, பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் பள்ளிகள் செயல்படுமா அல்லது விடுமுறையா என்பதை அறிவிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித் துறைக்கு, பெற்றோர் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.
Plz leave
ReplyDeleteஏற்கனவே மத்திய அரசின் வழிகாட்டுதல்களால் பணியிடங்கள் குறைக்கப்பட்டுள்ளது. அதிமுக அரசு தற்போது ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59-ஆக மாற்றி தற்போது சிறப்பாக 60 ஆக மாற்றியுள்ளார்கள். யாருமே பி.எட் படித்துவிட்டு காத்திருக்கவும் இல்லை. தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகளாக காத்திருக்கவும் இல்லை. அதனால் தான் 58 வயதை 60 ஆக மாற்றி படித்தவர்களின் வயிற்றில் பாலை வார்த்திருக்கிறார்கள். இதுமட்டுமல்லாமல் பணிக்குச் செல்லும் வயதை 40 ஆகக் குறைத்திருக்கிறார்கள். 40 வயதிற்கும் மேல் யாரும் ஆசிரியர் பணிக்கு வந்துவிடக் கூடாது என்று சிறப்பான அறிவிப்பை அதிமுக ஆட்சியில் கொண்டு வந்து அவர்களின் வயிற்றிலும் பாலை வார்த்திருக்கிறார்கள். 7 ஆண்டுகளாக தகுதித் தேர்வில் தேர்ச்சிபெற்றும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. வாழ்க தமிழ்நாடு...
ReplyDeleteமனதில் வைத்துக்கொள்ளுங்கள், தேர்தலில் காட்டுங்கள்.
Delete