தேர்தல் பணியின் போது மருத்துவ விடுப்பு - உண்மைத்தன்மையை ஆராய மருத்துவ குழுவை நியமித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 18, 2021

தேர்தல் பணியின் போது மருத்துவ விடுப்பு - உண்மைத்தன்மையை ஆராய மருத்துவ குழுவை நியமித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!

தேர்தல் பணியின் போது மருத்துவ விடுப்பு - உண்மைத்தன்மையை ஆராய மருத்துவ குழுவை நியமித்து தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவு!


ஆணை : தேனி மாவட்டத்தில் அடங்கிய நான்கு சட்டமன்றத் தொகுதிகளில் சட்டப்பேரவை பொதுத் தேர்தல் , 2021 தொடர்பாக வாக்குச்சாவடிகளில் பணிபுரிய வாக்குச்சாவடி அலுவலர்கள் நியமித்து ஆணையிடப்பட்டது . இந்நேர்வில் , நியமனம் செய்யப்பட்ட அலுவலர்கள் சிலர் பணிக்கு செல்ல மறுப்பதுடன் மருத்துவ காரணங்களின் பேரில் மருத்துவ விடுப்பு அளிப்பதாக தேர்தல் நடத்தும் அலுவலர்களிடமிருந்து தகவல்கள் வரப்பெற்றுள்ளது . வாக்குச்சாவடி பணியானது தேர்தல் ஆணைத்ததால் முக்கியத்துவம் அளிக்கப்படும் பணியாகும். தேர்தல் பணிக்கு நியமிக்கப்படும் பணியாளர்கள் எதிபாராதவிதமாக மருத்துவ விடுப்பில் செல்வதை தவிர்க்க இயலாது . எனினும் , சிலர் தேர்தல் பணியை புறக்கணிக்கும் நோக்கில் மருத்து விடுப்பு எடுப்பது என்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு எதிரானது . எனவே , மருத்து விடுப்பின் பேரில் செல்லும் அலுவலர்களின் உண்மைத்தன்மையை உறுதி செய்யும் பொருட்டு கீழ்க்கண்ட அலுவலர்கள் கொண்ட குழுவினை நியமித்து ஆணையிடப்படுகிறது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி