பாலிடெக்னிக் கல்லூரியில் இலவசமாக படிக்க அழைப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 3, 2021

பாலிடெக்னிக் கல்லூரியில் இலவசமாக படிக்க அழைப்பு.

 

தர்மபுரி, நல்லானூர் ஜெயம் பாலிடெக்னிக் கல்லூரியில் இலவசமாக பயில, தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என, தருமம் அறக்கட்டளை சார்பில் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:

தர்மபுரி மாவட்டம், நல்லானூரில், ஜெயம் பாலிடெக்னிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, பல்வேறு சலுகைகளை வழங்கி வருகின்றனர். தர்மபுரி மாவட்ட தருமம் அறக்கட்டளை சார்பில், மாணவர்களுக்கு சேவை செய்யும் நோக்கில், கல்லூரியில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு, முற்றிலும் இலவச கல்வி அளிக்க, 25 சீட் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், ECE, EEE, Mech., Cvil, Computer Science ஆகிய ஐந்து பிரிவு பாடப்பிரிவுகளுக்கும், தலா, ஐந்து பேர் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், பெற்றோரை இழந்து வறுமையில் உள்ளவர்கள், மேல் படிப்பு படிக்க ஆர்வமுள்ள மாணவர்கள், மேற்படிப்பு படிக்க வசதியில்லாதவர்கள், கிராமப்புற அடித்தட்டு நிலையில் உள்ள மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம். இதற்கு தகுதி வாய்ந்த ஏழை, எளிய மாணவர்கள், தருமம் அறக்கட்டளை நிர்வாகிகளை, 99441 70966, 98429 59971, 95970 12697 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி