7 மாநிலங்களில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 3, 2021

7 மாநிலங்களில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து


நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து, தற்போது வரை உ.பி., மகாராஷ்டிரா உள்ளிட்ட 7 மாநிலங்கள் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளன.

இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தொற்றுப் பரவல் முழுவதும் குறையாத சூழலில், பிரதமர் மோடி ஜூன் 1-ம் தேதி மாலை மத்திய அமைச்சர்கள் மற்றும் கல்வித்துறை உயர் அதிகாரிகளுடன் 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்தலாமா வேண்டாமா என்பது குறித்த அவசர ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார். கூட்டத்தின் முடிவில் நாடு முழுவதும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாகப் பிரதமர் அறிவித்தார்.


எனினும் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு விமர்சனமும் கிளம்பி வருகிறது. பொதுத் தேர்வை ரத்து செய்த மத்திய அரசு, நீட், ஜேஇஇ நுழைவுத் தேர்வுகளை ரத்து செய்யாதது ஏன் என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

இதற்கிடையே தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வை நடத்தலாமா அல்லது ரத்து செய்யலாமா என்பது தொடர்பாகக் கல்வியாளர்கள், மருத்துவ வல்லுநர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்களுடன் கருத்து கேட்கப்படும். இரண்டு நாட்களுக்குள் கருத்துகேட்ட பின்னர் முடிவு செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்

இந்நிலையில் குஜராத் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலங்கள் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை ரத்து செய்தன. அதைத் தொடர்ந்து, உத்தராகாண்ட் மாநிலமும் தங்கள் கல்வி வாரியத்தில் பிளஸ் 2 தேர்வை ரத்து செய்தது. மேலும் ராஜஸ்தான், கோவா ஆகிய மாநிலங்களும் தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்தன.

அதைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களும் பொதுத் தேர்வை ரத்து செய்துள்ளன. மதிப்பெண் மதிப்பீட்டு முறை பிறகு அறிவிக்கப்படும் என்றும் அந்த மாநிலங்கள் அறிவித்துள்ளன.

தேர்வுகளை ரத்து செய்த மாநிலங்களில், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிர மாநிலங்களைத் தவிர பிற மாநிலங்கள் அனைத்தும் பாஜக ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. இப்ப என்னா

    எதுக்கு இந்த விளம்பரம்


    தமிழ்நாடட்டிலும் ரத்து மன்னனும் அதுதான்....

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி