பணி மாறுதல் கலந்தாய்வில் புதிய நடைமுறையினை கைவிட வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
கைவிட கோரிக்கை :
தமிழகத்தில் சிறந்த நிர்வாகத்தினை வழங்கிவரும் தங்களுக்கு எங்களது நன்றியினையும் , வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். மதிப்புமிகு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களால் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான மாறுதல் கலந்தாய்வு 12.10.2021 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான இடமாறுதலை வெளிப்படைத் தன்மையோடு கலந்தாய்வு முறையில் நடத்த முன்வந்துள்ள ஆணையரின் நடவடிக்கைகளை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் வரவேற்கிறோம். அதேநேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்களையும் காலிப்பணியிடங்களாக கருதப்பட்டு பணிமாறுதல் கலந்தாய்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய நடைமுறை , கலந்தாய்வு என்ற பெயரில் செயல்படுத்தப்படும் கட்டாயப் பணி மாறுதல் நிகழ்வாகவே கருதப்படுகிறது. இது எதிர்காலத்தில் தவறான முன்னுதாரனமாக அமைந்துவிடும்.
இந்த நடவடிக்கை , கலந்தாய்வு என்ற இனிப்பை காட்டி , கையில் இருப்பதை பறிக்கும் நடவடிக்கையாக கருதப்பட்டுவிடும். எனவே , அனைத்து பணியிடமும் , காலிப்பணியிடம் என்ற புதிய நடைமுறையை கைவிட்டு தற்போது இருக்கும் காலிப் பணியிடங்களின் அடிப்படையிலேயே கலந்தாய்வு பணி மாறுதல் நடத்த வேண்டும் என மிக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.
https://www.kalviseithi.net/2021/10/blog-post_76.html?showComment=1633832379082&m=1#c8254295941710204586
ReplyDeleteஒரு சங்கம் வேணாம்னு சொல்லுது.
ஒரு சங்கம் வேணும்னு சொல்லுது.
ஒரே ஸ்கூல்ல 20 30 வருஷம் வேலை பாத்தா என்ன அர்த்தம்.. உலகம் பெருசு...
60வது வரை ஒரே இடத்தில டெண்ட் அடிப்பவர்களுக்கு அதிர்ச்சி செய்தி
ReplyDeleteஇது சரியான நடைமுறை தான்...ஆசிரியர் கலந்தாய்விலும் இத்தகைய நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்..அப்பொழுது தான் கல்வித்துறையில் இருக்கும் தவறுகள் களையப்படும்...ஒரே பணியிடத்தில் பல்லாண்டுகள் பணிபுரிவதால் ஏற்படும் பல பிரச்சினைகள் தீர்க்கப்படும்..
ReplyDeleteEppa enna nadukuthune theriyama comment pannatha.muthalil ennavendru padithu therinthu kolavum
DeleteIppadiye confuse panni nadakka vendiya counselling um nadakka vidama panniduvanga
ReplyDeleteசரியான நடைமுறை
ReplyDeleteஆசிரியர்கள் பணிமாறுதல் கட்டாயம் தேவை. 20/30 ஆண்டுகள் வரை ஒரே இடத்தில் பணி என்பது தவறுதான். மேலும், அரசு நடைமுறைப்படுத்தினால்
ReplyDeleteபாராட்டலாம்..!!!.சட்டம் தன் கடமையை நிறைவேற்றட்டும்.
சல்ல சொல்ல பதிவுகள்........
Deleteஅப்போதும் அவர் சீனியராக இருப்பார்.அதே இடத்தை தான் எடுப்பார்.
Deleteசங்கம் எதுக்குயெடுத்தாலூம் எதிர்ப்பு தெரிவிக்கும்
ReplyDeleteஉனக்கு என்ன தெரியும் னு நீ இங்க வந்து comment panra
Delete