நவ. 10, 11, 12ல் நடைபெறவிருந்த 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 9, 2021

நவ. 10, 11, 12ல் நடைபெறவிருந்த 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

 

தமிழகத்தில் தொடர் கனமழையால் நவம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த தனித்தேர்வர்களுக்கான 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழகம் முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் தொடர் கனமழை பெய்துவருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. 


முன்னதாக, தனித்தேர்வர்களுக்கான 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நவம்பர் 8 முதல் 12 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால், கனமழை எச்சரிக்கை காரணமாக நவ. 8, 9 தேதிகளில் முறையே நடைபெறவிருந்த தமிழ், ஆங்கிலம் தேர்வுகள் மட்டும் ஒத்திவைக்கப்பட்டது. 


தொடர்ச்சியாக மேலும் சில தினங்களுக்கு கனமழை இருப்பதால் நவம்பர் 10, 11, 12 ஆகிய தேதிகளில் முறையே நடைபெறவிருந்த கணிதம், அறிவியல், சமூகவியல் பாடத் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராம வர்மா அறிவித்துள்ளார் . 


ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகளுக்கான மாற்று தேதிகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் கூடுதல் விவரங்களை தனித்தேர்வர்கள் தேர்வுத்துறையின் https://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி