குழந்தைகள் தினம்: பள்ளிகளுக்கு உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 12, 2021

குழந்தைகள் தினம்: பள்ளிகளுக்கு உத்தரவு.

குழந்தைகள் தின விழாவுக்காக, ஒன்றாம் வகுப்பு முதல் அனைத்து மாணவர்களுக்கும் கலை நிகழ்ச்சிகள் நடத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


முன்னாள் பிரதமர் நேரு பிறந்த நாளான, நவம்பர் 14ல் குழந்தைகள் தினம் கொண்டாடப்படும். இதையொட்டி பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள் நடத்த, தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி உத்தரவிட்டுள்ளார். 


இது குறித்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:அனைத்து மாணவர்களுக்கும் நவ., 1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. நீண்ட நாட்களாக பள்ளிக்கு செல்ல முடியாத குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் வகையில், விளையாட்டு, கலை நிகழ்ச்சி போன்ற செயல்பாடுகள் தேவைப்படுகின்றன.


வரும் 14ம் தேதி குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதால், பள்ளி மாணவர்களுக்கு கலை நிகழ்ச்சிகள், விளையாட்டு, பேச்சு, கட்டுரை போட்டி உள்ளிட்டவற்றை நடத்தி பரிசளிக்க வேண்டும். குழந்தைகள் இடையே புத்துணர்ச்சியையும், எழுச்சியையும் உருவாக்க, ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி