பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு தகுதியான மாணவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 19, 2021

பெருந்தலைவர் காமராஜர் விருதுக்கு தகுதியான மாணவர்கள் விபரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களிடையே , தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்ற மாணவர்களில் ஒரு மாவட்டத்திற்கு 10 ஆம் வகுப்பில் 15 மாணவர்கள் ( ரொக்கப்பரிசு தலா ரூ .10000 / - & பாராட்டு சான்றிதழ் ) மற்றும் 12 ஆம் வகுப்பில் 15 மாணவர்கள் ( ரொக்கப்பரிசு தலா ரூ .20000 / - & பாராட்டு சான்றிதழ் ) வீதம் தேர்ந்தெடுத்து சிறந்த மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் விருது வழங்கி மாணவர்களின் கல்வி மற்றும் தனித் திறன்களை ஊக்குவிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.


 எனவே கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது 01.09.2021 முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு முடிய பள்ளிகள் செயல்பட்டு வருவதால் நடப்புக் ( 2021-2022 ) கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தமிழ்வழியில் பயிலும் மாணவ , மாணவியரின் தேர்ச்சி முடிவுகளை எதிர்நோக்கி ,  அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள நெறிமுறைகளுக்குட்பட்டு அவர்களது இணை செயல்பாடுகளைக் கண்டறியும் வகையில் உரிய போட்டிகளை நடத்தி அதன் முடிவுகள் குறித்த விவரங்களை சேகரித்து தயாராக வைத்திருக்குமாறும் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

DSE - Kamarajar Award Proceedings - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி