ஜனவரி 5 ஆம் தேதி கவர்னர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது ; தமிழக அரசு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2022

ஜனவரி 5 ஆம் தேதி கவர்னர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது ; தமிழக அரசு

 

2022-ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் ஜனவரி 5 ஆம் தேதி தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் காரணமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கலைவாணர் அரங்கில் தான் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் ஆர்.என் ரவி  உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது. 


முன்னதாக,  2022-ஆம் ஆண்டின் தமிழக சட்டப்பேரவை முதல் கூட்டத் தொடர்  புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெறும்  என சபாநாயகர் அப்பாவு அறிவித்து இருந்தார். தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கத்தொடங்கியிருப்பதால் தமிழகத்தில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் நேற்று சற்று கடுமையாக்கப்பட்டது. இதையடுத்து, கலைவாணர் அரங்கிலேயே தமிழக சட்டப்பேரவை கூட உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி