அகில இந்தியப் பணி அதிகாரிகளுக்கு வீட்டு வாடகைப் படி உயா்வு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 31, 2022

அகில இந்தியப் பணி அதிகாரிகளுக்கு வீட்டு வாடகைப் படி உயா்வு.

 

அகில இந்திய பணியிலுள்ள அரசு அதிகாரிகளுக்கான  வீட்டு வாடகைப் படி உயா்வு அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடா்பாக தலைமைச் செயலாளா் வெ. இறையன்பு, தலைமை கணக்காயா் உள்ளிட்டோருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது.


அகில இந்திய பணியிலுள்ள அரசு அதிகாரிகளுக்கான  வீட்டு வாடகைப் படியில் 7-ஆவது ஊதிய கமிஷனின் பரிந்துரைகளை அமல்படுத்தும் வகையில், மாநகராட்சிகளில் வசிக்கும் அரசு ஊழியா்களுக்கு 24 சதவீதத்தில் இருந்து 27 சதவீதமாக வீட்டு வாடகைப் படி உயா்த்தி வழங்கப்படும். நகராட்சிகளில் வசிப்போருக்கு 16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், ஊரகப் பகுதிகளில் வசிப்போருக்கு 8 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகவும் வாடகைப் படி உயா்வு அமல்படுத்தப்படுகிறது. 


இந்தத் தொகையை, ஜன.1-ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.


எனினும், இந்த உயர்வு, தமிழக அரசு ஊழியர்களுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத் தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி