தேர்தல் பணியாளர்களுக்கு நாளை முதல் மூன்று கட்டங்களாக பயிற்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2022

தேர்தல் பணியாளர்களுக்கு நாளை முதல் மூன்று கட்டங்களாக பயிற்சி

 

தேர்தல் பணிகளில் ஈடுபடும் அலுவலர்களுக்கு, நாளை முதல் மூன்று கட்டமாக, பயிற்சி வகுப்புகள் நடத்த, மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

இது தொடர்பாக, மாநிலத் தேர்தல் ஆணையம் செயலர் சுந்தரவல்லி, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, தேர்தல் பணியாளர்கள் அனைவருக்கும், முதல் கட்ட பயிற்சி வகுப்பை, நாளை நடத்த வேண்டும். 

பிப்., 9ம் தேதி, இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பு; ஓட்டுப்பதிவுக்கு முந்தைய நாளான பிப்., 18ம் தேதி, மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நடத்தப்பட வேண்டும். மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பு நிறைவடைந்ததும், அவர்கள் ஓட்டுச்சாவடிக்கு அனுப்பப்பட வேண்டும்.

தேர்தல் பணியாளர்களுக்கு, மாநில தேர்தல் ஆணையம் உருவாக்கி உள்ள, மென்பொருள் உதவி யுடன் ஓட்டுச்சாவடிகள் ஒதுக்கப்பட வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி