பள்ளிகளில் வழிகாட்டி மையங்கள் துவக்க நிதி ஒதுக்கீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 30, 2022

பள்ளிகளில் வழிகாட்டி மையங்கள் துவக்க நிதி ஒதுக்கீடு.

 

பள்ளிகளில் உயர் கல்வி, தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் ஆலோசனை மையம் அமைக்க, 3.08 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு முடித்ததும் மாணவர்கள், மேல்நிலை வகுப்பு, தொழிற்பயிற்சி நிறுவனம் மற்றும் தொழிற்கல்வியை தேர்வு செய்து, உயர் கல்வி கற்கின்றனர்.இவர்களுக்கான உயர் கல்வி சார்ந்த வழிகாட்டுதல்களை, ஆசிரியர்கள், பெற்றோர் செய்கின்றனர். பத்தாம் வகுப்பு முடிக்கும் மாணவர்களுக்கு, மேல்நிலை வகுப்பில் எந்த பிரிவை தேர்வு செய்யலாம் என்பது குறித்து, புரிதல் இல்லாத நிலை உள்ளது.

மேல்நிலை வகுப்பு பாடங்களில், உயர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் உள்ளன. எனினும், அரசுப் பள்ளிகளில் படிக்கும், ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான, கிராமப்புற மாணவர்களுக்கு, உயர் கல்வி, தொழில், வேலைவாய்ப்பு குறித்த புரிதலில் பெரிய இடைவெளி உள்ளது.

எனவே, தமிழகத்தில் உள்ள, 6,177 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தொழில் மேற்படிப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த விபரங்களை வழங்க, வழிகாட்டும் ஆலோசனை மையம் அமைக்க, அரசு முடிவு செய்தது. 

இதை செயல்படுத்த நிதி ஒதுக்கும்படி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அரசுக்கு கடிதம் எழுதினார். அதை பரிசீலனை செய்த அரசு, 3.08 கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி