மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் சார்ந்து பள்ளிகளுக்கான CEO அறிவுரைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 2, 2022

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் சார்ந்து பள்ளிகளுக்கான CEO அறிவுரைகள்!

மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் சார்ந்து வேலூர் முதன்மைக் கல்வி அலுவலரின் அறிவுரைகள்!


அனைத்து அரசு / நகரவை / நிதியுதவி / ஆதிதிராவிட நலம் / சுயநிதி / மெட்ரிக் / சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் சுகாதாரத்துறையிலிருந்து பள்ளிகளுக்கு வருகை புரியும்போது ஒத்துழைப்பு நல்குமாறும் . மாணவ / மாணவியருக்கு தடுப்பூசி செலுத்த கீழ்கண்ட ஏற்பாடுகளை செய்துதருமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


1 ) வட்டாரக்கல்வி அலுவலர்கள் தங்கள் வட்டாரத்தில் உள்ள அனைத்து அரசு / நகரவை / ஆதி திராவிடர் நலம் /சுயநிதி/மெட்ரிக்/சி.பி.எஸ்.இ உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் திங்கட்கிழமை முதல் தடுப்பூசி முகாம் நடைபெறுவதை , தலைமையாசிரியர்ளை தொடர்பு கொண்டு உறுதி செய்தல் மற்றும் மேற்பார்வையிட வேண்டும்.


2 ) வட்டாரக்கல்வி அலுவலர்கள் தினமும் அவர்களுடைய வட்டாரத்தில் உள்ள அந்தந்த உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெறும் தடுப்பூசிமுகாமில் மாணவ / மாணவிகள் தடுப்பூசி செலுத்திக்கொண்ட விவரத்தை அன்றைய தினமே மாவட்டக்கல்வி அலுவலத்தில் ஒப்படைக்க வேண்டும் . அவ்விவரத்தை தொகுத்து , மாவட்டக்கல்வி அலுவலர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் அன்றைய தினமே ஒப்படைக்கப்பட வேண்டும்.


3 ) தலைமையாசிரியர்கள் தங்கள் பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமிற்கு தனி அறை ஒதுக்கி தருதல் வேண்டும் . அவ்வறையில் குடிநீர் வசதி செய்யப்பட்டிருக்க வேண்டும் . மாணவர்கள் தடு பூசி செலுத்தும் அறைக்கு அருகிலேயே ஒரு அறை ஒதுக்கி தடுப்பூசி செலுத்திக்கொள்ள தயார் நிலையில் மாணவர்களை அமரச்செய்ய வேண்டும்.


4 ) மாணவ / மாணவியர் தடுப்பூசி செலுத்துவதற்கு முன் காலை / பிற்பகல் உணவு அருந்தினரா என தலைமையாசிரியர்கள் உறுதி செய்ய வேண்டும்.


5 ) பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமிற்கு வருகைபுரியும் மருத்துவர்களுக்கு உதவி செய்ய பள்ளியில் இரண்டு ஆசிரியர்களை நியமனம் செய்யவேண்டும்.

6 ) தலைமையாசிரியர்கள் அன்றைய தினம் முகாம் முடிந்தவுடன் தடுப்பூசி செலுத்திக்கொண்ட மற்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாணவ மாணவியர் விவரத்தை முதன்மைக்கல்வி அலுவலக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள Link- ஐ Click செய்து உள்ளீடு செய்யப்பட வேண்டும் .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி