பேராசிரியர் மாற்று பணி ஓராண்டு நீட்டிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 23, 2022

பேராசிரியர் மாற்று பணி ஓராண்டு நீட்டிப்பு

 

அண்ணாமலை பல்கலையில் உபரியாக இருந்து, பிற பல்கலைகளுக்கு மாற்றப்பட்ட பேராசிரியர்களுக்கான மாற்று பணிக்காலம், மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 


தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அண்ணாமலை பல்கலையின் நேரடி கல்லுாரிகளில், மாணவர் எண்ணிக்கைக்கு தேவையானவர்களை விட, அதிக பேராசிரியர்கள் பணியில் இருந்தனர். இவர்களுக்கான ஊதியம் வீணாவதை தடுக்கும் வகையில், வேறு கல்லுாரிகளுக்கு மாற்றப்பட்டனர். 


இந்த பணிக்காலம் இந்த மாதம் முடிய இருந்த நிலையில், மாற்றுப் பணி காலத்தை மேலும் ஓர் ஆண்டுக்கு நீட்டித்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது. இந்த வகையில், 144 உதவி பேராசிரியர்கள், அண்ணா பல்கலை, பாரதிதாசன், மதுரை காமராஜ், பாரதியார் பல்கலைகள், பாலிடெக்னிக்குகளில் மாற்று பணிகளில் இன்னும் ஓர் ஆண்டுக்கு நீடிப்பர் என உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி