குரூப் - 2, 2 ஏ' பணிகளில் அடங்கிய, 5,529 பணிகளுக்கான போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று முடிகிறது. விண்ணப்ப பதிவுக்கு கூடுதல் அவகாசம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில், குரூப் - 2 பதவிகளில் 116; குரூப் - 2 ஏ பதவிகளில் 5,413 காலியிடங்களை் நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், மே 21ல் முதல்நிலை தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, பிப்., 23ல் துவங்கியது.
பட்டப்படிப்பு முடித்த அனைவரும், குரூப் - 2, 2 ஏ பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.இந்நிலையில், புதிதாக விண்ணப்பிக்கவும், விண்ணப்ப விபரங்களை திருத்தவும், கூடுதலாக ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.
Is there any chance for extension of date?
ReplyDelete