கோடை வெயில் தாக்கம் அதிகரித்ததால் ஏப்ரல் 4 முதல் ஒருவேளை மட்டுமே பள்ளிகள் திறப்பு : ஆந்திர அரசு!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 2, 2022

கோடை வெயில் தாக்கம் அதிகரித்ததால் ஏப்ரல் 4 முதல் ஒருவேளை மட்டுமே பள்ளிகள் திறப்பு : ஆந்திர அரசு!!

 


கோடை வெயிலால் மாணவர்களின் ஆரோக்கியம் பாதிக்காத வகையில்,  ஏப்ரல் 4 முதல் ஒருவேளை மட்டுமே பள்ளிகள் திறக்கப்படும் என்று ஆந்திர அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல மாவட்டங்களில் 40 டிகிரிக்கு மேல் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதோடு அனல் காற்று வீசி வருகிறது. இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.


இந்நிலையில் மாணவர்களுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாமல் இருப்பதற்காக 4ம் தேதி (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் காலை 7.30 முதல் 11.30 வரை மட்டும் திறக்கப்படும்.  ஏபரல் 27ம் தேதி முதல் 10ம் வகுப்பு தேர்வுகளும், மே 6 முதல் இன்டர்மீடியட் ( பிளஸ் 2 )  தேர்வுகள் நடைபெறுமென ஆந்திர மாநிலக் கல்வித் துறை அமைச்சர் ஆதிமூலப்பு சுரேஷ் தெரிவித்துள்ளார். ஆந்திர கல்வி அமைச்சரின் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

2 comments:

  1. மாணவர்களின் சிரமத்தை புரிந்த ஓர் நல்ல மக்கள் அரசு. வாழ்க.

    ReplyDelete
  2. மாண்புமிகு தமிழக முதல்வர் ஐயா அவர்களே,தமிழகத்தில் பல மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி தாண்டி விட்டது ஐயா.மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படாத வகையில் அதே நேரம் அவர்களின் கல்வியும் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை எடுங்கள் ஐயா

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி