தமிழகத்தில் செயல்படும் அரசு / அரசு நிதியுதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் 6 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களிடமிருந்து வசூலிக்கப்பட்டு வந்த சிறப்புக் கட்டணத்தை இரத்து செய்ததினால் ஏற்படும் நிதி இழப்பினை ஈடுசெய்யும் வகையில் பள்ளிகளுக்கான சிறப்புக் கட்டண இழப்பீட்டுத் தொகை 2008-2009 ஆம் ஆண்டு முதல் அரசால் வழங்கப்பட்டு வருகிறது.
மதுரை , தேனி , திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்படும் ( கள்ளர் சீரமைப்பு ) உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கான சிறப்பு கட்டண இழப்பீட்டுத் தொகை அரசால் வழங்கப்பட்டு வருகிறது . பார்வை 3- ல் காணும் இவ்வாணையரக நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் செயல்முறைகளின் படி 2022-2023 - ஆம் கல்வி ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி , 2022-2023 - ஆம் ஆண்டிற்கான சிறப்பு கட்டண இழப்பீட்டு தொகைக்கான அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களின் மொத்த எண்ணிக்கை விவரம் மற்றும் கள்ளர் உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை விவரத்தினை ( மதுரை , தேனி , திண்டுக்கல் ) முழுமையாகவும் , துல்லியமாகவும் அனைத்து கல்வியியல் மேலாண்மை தகவல் மையம் ( EMIS- Educational Management Information System ) இணையதளம் வாயிலாக பதிவேற்றம் செய்யுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி