ஒன்றியத்திற்குள் மற்றும் மாவட்டத்திற்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) மாறுதல்கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு... - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2022

ஒன்றியத்திற்குள் மற்றும் மாவட்டத்திற்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) மாறுதல்கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் கவனத்திற்கு...

அனைத்து வகைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் வணக்கம்.

ஒன்றியத்திற்குள் மற்றும் மாவட்டத்திற்குள் (ஒன்றியம் விட்டு ஒன்றியம்) மாறுதல்கோரி விண்ணப்பித்துள்ள அனைத்து இடைநிலை ஆசிரியர்களையும் இன்று மாலை  4.30 மணியளவில் வட்டார கல்வி அலுவலகத்திற்கு வருகை புரிந்து,  மாறுதலுக்கான முன்னுரிமை பட்டியலில் உள்ள அவர்களின் விவரங்களைச் சரிபார்த்து கையொப்பமிட அறிவுரை வழங்கி அனுப்பி வைக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்பெறுகின்றார்கள்.

மேலும், நாளை 18/06/22 முற்பகல் சரியாக 8.00 மணிக்குள் கள்ளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கு ( மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்)  தவறாமல் வருகை புரிந்து கலந்தாய்வில் கலந்து கொள்ளுமாறும் அறிவுரை வழங்கிடுமாறு கேட்டுக் கொள்ளப்பெறுகின்றார்கள்.

குறிப்பு: மேற்கண்ட செய்தி  எனக்குத் தெரியவில்லை என்று எந்த ஆசிரியரும் புகார் அளிக்கா வண்ணம் உடனடியாக அவர்களுக்குத் தகவல் தெரிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அனைவரும் மீண்டும் வலியுறுத்திக் கேட்டுக் கொள்ளப்பெறுகின்றார்கள்.

வ.க.அலுவலர்கள்,
சங்கராபுரம்.

1 comment:

  1. மாவட்ட மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு எதுவும் இல்லையா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி