செப்டம்பர் 10 முதல் 15-ம் தேதி வரை ‘டெட்’ முதல் தாள் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 11, 2022

செப்டம்பர் 10 முதல் 15-ம் தேதி வரை ‘டெட்’ முதல் தாள் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

 

ஆசிரியர் பணிக்கான டெட் முதல்தாள் தேர்வு செப்டம்பர் 10 முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


அனைத்துவித பள்ளிகளிலும் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெறவேண்டும். இந்த டெட் தேர்வு மொத்தம் 2 தாள்களை கொண்டது. முதல்தாளில் தேர்ச்சி பெறுபவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், 2-ம் தாளில் தேர்ச்சி அடைபவர்கள் பட்டதாரி ஆசிரியராகவும் பணிபுரியலாம். தமிழகத்தில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் டெட் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தாண்டு டெட் தேர்வு இருகட்டங்களாக நடத்தப்பட உள்ளது.


முதல் தாளுக்கான தேர்வு ஆகஸ்ட் 25 முதல் 31-ம் தேதி வரை கணினி வழியாக நடைபெறும் என்று முன்னர் அறிவிக்கப்பட்டது. தற்போது நிர்வாக காரணங்களால் டெட் தேர்வு (முதல் தாள்) செப்டம்பர் 10 முதல் 15-ம் தேதி வரை நடத்தப்படவுள்ளது. தேர்வுக்கு 15 நாட்களுக்கு முன்னர் இந்த தேர்வுக்கான பயிற்சியை டிஆர்பி இணையதளத்தில் தேர்வர்கள் மேற்கொள்ள வாய்ப்பு வழங்கப்படும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி