TNPSC - குரூப்-3ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 17, 2022

TNPSC - குரூப்-3ஏ பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு-III(தொகுதி-IIIஏ) பணிகளில் அடங்கிய கீழ்வரும் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


விளம்பர எண்: 636


அறிக்கை எண் 26/2022


பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 


பணி: கூட்டுறவு சங்கங்களில் இளநிலை ஆய்வாளர்(கூட்டுறவுத் துறை)

காலியிடங்கள்: 14

வயதுவரம்பு: 01.07.2022 தேதியின்படி கணக்கிடப்படும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 


பணி: பண்டக காப்பாளர், நிலை-II(தொழில் மற்றும் வர்த்தகத் துறை)

காலியிடங்கள்: 1

சம்பளம்: மாதம் ரூ.20,600 - 75,900

வயதுவரம்பு: 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். அதிகபட்ச வயதுவரம்பு இல்லை.


தகுதி: 10 ஆம் வகுப்பு + 12 ஆம் வகுப்பு அல்லது இணைக்கல்வித் தகுதி + இளங்கலை பட்ட என்ற முறையில் பெற்றிருக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட மற்றும் முன்னுரிமை அளிக்கப்படும் கல்வித் தகுதியினை அறிவிப்பு வெளியிடப்பட்ட நாளன்று அல்லது அதற்கு முன்னர் பெற்றிருத்தல் வேண்டும். 


விண்ணப்பக் கட்டணம்:  நிரந்தரப் பதிவுக் கட்டணம் ரூ.150 + தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். ஏற்கனவே நிரந்த பதிவு இருப்பவர்கள் நிரந்தர பதிவு கட்டணம் செலுத்த வேண்டாம். கட்டண சலுகைகள் குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.


தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். 


விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 


ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 14.10.2022


எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 28.01.2023 


மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/26_2022_CCSE_III_Notfn_Tamil.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி