ஆசிரியர் சங்கம் அக்.28ல் ஆர்ப்பாட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Sep 18, 2022

ஆசிரியர் சங்கம் அக்.28ல் ஆர்ப்பாட்டம்

 ''பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அக்., 28ம் தேதி, மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது,'' என, தலைமை ஆசிரியர் சங்க மாநில தலைவர் அன்பரசன் தெரிவித்தார்.

தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டையில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற மாநில தலைவர் அன்பரசன், கூறியதாவது:

 மாணவர்களின் நலன் கருதி, தமிழக அரசு, பள்ளி கல்வித்துறை மூலமாக, நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்க வேண்டும்.

பள்ளி கல்வித்துறையில் நிலவி வரும் பல்வேறு குளறுபடிகளை கண்டித்தும், பள்ளி கல்வித்துறை இயக்குனர் மற்றும் அமைச்சர் முரண்பட்ட கருத்துக்களை கூறி வருவதை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், அக்., 28ம் தேதி, சென்னையில், மாநில அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மாணவர்களை அன்பாக நடத்த வேண்டும் என்பது தான், எங்களுடைய நிலைப்பாடு. சில பகுதிகளில், ஆசிரியர்கள் மீது பல்வேறு புகார்கள் பெறப்பட்டு, போலீஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.குற்றச்சாட்டுகள் மீது தகுந்த ஆதாரங்கள் இருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும். சில இடங்களில் வேண்டுமென்றே பொய்யான குற்றச்சாட்டுகளை ஆசிரியர்கள் மீது வைக்கின்றனர். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி