டிச .7 முதல் பகுதிநேர ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 25, 2022

டிச .7 முதல் பகுதிநேர ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு

பள்ளிக் கல்வித் துறையில் பகுதி நேர ஆசிரியா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு, முதல் கட்டமாக வரும் டிச.7-ஆம் தேதி தொடங்கவுள்ளது.

இதுகுறித்து, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் மாநிலத்திட்ட இயக்குநரகம் சாா்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் பகுதி நேர ஆசிரியா்களுக்கு சுயவிருப்பத்தின் அடிப்படையில் பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி பகுதிநேர பயிற்றுநா்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு முதல் கட்டமாக டிச.7-ஆம் தேதி இணைய வழியில் நடைபெறவுள்ளது.


இதில் ஓவிய ஆசிரியா்கள் மட்டுமே பங்கேற்க முடியும். தொடா்ந்து உடற்கல்வி, தொழிற்கல்வி பிரிவுகளில் உள்ள பயிற்றுநா்களுக்கான மாறுதல் கலந்தாய்வு தனித்தனியாக நடத்தப்படும்.

முதலில் மாவட்டத்துக்குள்ளும், அதன்பின் மாவட்டம் விட்டு மாவட்டத்துக்கும் இடமாறுதல் பெறுவதற்கான கலந்தாய்வு நடைபெறும்.

இதில் விருப்பமுள்ள பகுதிநேர ஆசிரியா்கள் தங்கள் விண்ணப்பங்களை நவ.30-ஆம் தேதிக்குள் சாா்ந்த பள்ளி தலைமை ஆசிரியா்கள் வாயிலாக எமிஸ் தளத்தில் பதிவுசெய்ய வேண்டும்.

ஒரு பணியிடத்துக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்தால், பணியில் சோ்ந்த நாள், நோய் பாதிப்பு உடையவா்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியவற்றின் அடிப்படையில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

இதுகுறித்த வழிமுறைகளை பின்பற்றி கலந்தாய்வை எந்த புகாருக்கும் இடமளிக்காதபடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள் நடத்தி முடிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிநேர ஆசிரியா்கள் பணியில் சோ்ந்து 12 ஆண்டுகள் கடந்துவிட்ட சூழலில், முதல் முறையாக இடமாறுதல் கலந்தாய்வு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி