மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு, கலை, பண்பாடு போட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2022

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு விளையாட்டு, கலை, பண்பாடு போட்டிகள்: பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

 

மாற்றுத்திறனாளி மாணவர்களின் திறனை வெளிக்கொண்டுவரும் வகையில் குழந்தைகள் தினமானநவம்பர் 14 முதல் மாற்றுத்திறனாளிகள் தினமான டிசம்பர் 3 வரை பல்வேறு விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை, பண்பாடுநிகழ்ச்சிகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


இதுகுறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குனர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: பள்ளி குழந்தைகளின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை நிறைவேற்றி வருகிறது. அனைத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளை முன்கூட்டியே அடையாளம் காண்பதில் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான தீர்வையும், பொதுமக்களிடையே இது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் மாநிலம் முழுவதுமான விழிப்புணர்வுநிகழ்ச்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


அனைத்து குழந்தைகளும் தரமான கல்வி பெறுவதை உறுதி செய்யும் நோக்குடன் “உள்ளடக்கிய கல்வியையும்” வழங்கி வருகிறது. எந்த குழந்தைக்கும் கல்வி விடுபடக்கூடாது என்பதை உறுதிசெய்யும் விதமாக மாநிலம் முழுவதும் மாற்றுத்திறனாளி குழந்தைகளை கண்டறிந்து, அவர்களை பள்ளியில் சேர்த்தல் தொடர்பானவிழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.



டிசம்பர் 3-ம் தேதி “உலக மாற்றுத்திறனாளிகள் தினம்” கொண்டாடப்படும் நிலையில், நவம்பர் 14-ம் தேதி முதல் டிசம்பர் 3-ம் தேதிவரை உறுதிமொழி எடுத்தல், விழிப்புணர்வு பேரணி, இணைவோம் மகிழ்வோம், கலை நிகழ்வு (காகித பறவை), கலை நிகழ்வு (நடனம்), விளையாட்டுப் போட்டிகள், சிறார் திரைப்படம் திரையிடுதல், சைகை மொழி தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட பல்வேறு விதமான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளி குழந்தைகளைக் கண்டறிதல் மற்றும் பள்ளியில் சேர்த்தல் குறித்த மாபெரும்தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ஏதுவான சூழலை ஏற்படுத்தும் நோக்கில் விளையாட்டு போட்டிகள் மற்றும் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகளை திட்டமிட்டபடி நடத்தி அவற்றை முறையாக ஆவணப்படுத்த வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி