School Morning Prayer Activities - 16.11.2022 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 16, 2022

School Morning Prayer Activities - 16.11.2022

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 16.11.2022

திருக்குறள் :

பால் : அறத்து பால்: 

அதிகாரம் - இல்வாழ்க்கை, 

குறள் -41 

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

விளக்கம்:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

பழமொழி :
Crosses are ladders to heaven.

தடைகள் தான் சொர்க்கத்தின் ஏணிப்படிகள்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. எ‌ந்த காரியம் எ‌ன்றாலு‌ம் கடவுள் மற்றும் மன சாட்சிக்கு பயந்து செய்வேன்.

 2. மனிதர்கள் என்னை பார்க்க வேண்டும் என்று செய்ய மாட்டேன்.

பொன்மொழி :

ஒரு நிமிடம் தாமதமாகச் செல்வதை விட மூன்று மணிநேரம் முன்கூட்டியே செல்வது சிறந்தது. --வில்லியம் ஷேக்ஸ்பியர்


பொது அறிவு :

1. வீடுகளுக்கு நம்பர் கொடுக்கும் முறை எப்போது உருவானது?

 1463ஆம் ஆண்டு.

 2. கைபர் கணவாயின் நீளம் என்ன ? 

 33 மைல்கள்.

English words & meanings :

Homographs - same spelling with different meanings. ஒப்பெழுத்து. பல்பொருள் ஒரு மொழி 

ஆரோக்ய வாழ்வு :

உடலில் இருந்து ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நாவல் பழ விதைகளில் காணப்படுகின்றன. இது உடலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்க உதவுகிறது. 

NMMS Q

விஜயநகர கட்டிடத் தூண்களில் பெரும்பாலும் காணப்படும் விலங்கு எது? 

விடை : குதிரை

நீதிக்கதை

உழைப்பின் பயன்

ஒரு விவசாயிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். விவசாயிக்கு வயது அதிகமானதால் இறந்து போகும் நிலையில் இருந்தபோது, தம் பிள்ளைகள் பொறுப்பில்லாமல் இருப்பதை பற்றி கவலையாக இருந்தார். ஒரு நாள், அவர் தம் பிள்ளைகளுக்கு தன்னுடைய நிலங்களை அவர்களுக்குப் பிரித்துக்கொடுத்தார். அது மட்டுமல்லாமல், அந்த நிலங்களிலும் ஓரிடத்தில், ஓரடி ஆழத்தில் புதையல் இருப்பதாகச் சொன்னார். அதைத் தேடி எடுத்துக்கொள்ளும்படிச் சொல்லிவிட்டு இறந்து போனார். 

பிள்ளைகள் மூவரும் தந்தைக்குச் செய்ய வேண்டிய இறுதிக் காரியங்கள் அனைத்தையும் செய்தார்கள். அதன்பின், அவர் சொல்லிய புதையலை எடுப்பதற்காக நிலத்தைத் தோண்ட ஆரம்பித்தார்கள். முதலில் மூத்த மகனின் நிலம் முழுவதையும் ஒரு அடி ஆழத்துக்கு தோண்டினார்கள். புதையல் எதுவும் கிடைக்கவில்லை. 

எப்படியும் புதையலைக் கண்டுபிடித்து விட வேண்டும் என்ற வெறியில், இரண்டாவது மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். ஏமாற்றம்தான் மிஞ்சியது. இவ்வளவு தூரம் வந்தபின் எப்படி விட முடியும் என்று கடைசி மகனின் நிலத்தையும் தோண்டினார்கள். மறுபடியும் ஏமாற்றமே! மூவரும் சேர்ந்து தோண்டியது வீணாக வேண்டாம் என்று எண்ணி, அந்த நிலங்களில் விதை விதைத்து நீர் பாய்ச்சி உரம் போட்டார்கள். ஆண்டு முடிவில் அவர்கள் நிலத்தில் அமோக விளைச்சல். அறுவடை செய்து விற்றதில் அவர்களுக்குக் கொள்ளை லாபம். இப்படி உழைப்பால் வரும் பயனைத்தான் அப்பா புதையல் என்று குறிப்பிட்டார் என்று பிள்ளைகள் மூவரும் புரிந்து கொண்டார்கள். 

நீதி :
உழைப்பினால் வரும் பணம் அதிஷ்டம் தரும்.

இன்றைய செய்திகள் - 16.11.22

* வாக்காளர் பெயர் சேர்க்க, திருத்தம் செய்ய 7.10 லட்சம் பேர் விண்ணப்பம்.

* பாலாற்றில் 1,460 கனஅடிக்கு நீர்வரத்து அதிகரிப்பு: ஆற்றில் குளிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை.

* தமிழகத்தில் தினசரி மின்தேவை சராசரியாக 2,000 மெகாவாட் குறைந்தது.

* ஆக்கிரமிப்பு கோயில் நிலங்களை மீட்க ஒத்துழைக்காத அதிகாரிகளுக்கு சிறை: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.

* காஷ்மீரில் கடும் பனிப் பொழிவு - நெடுஞ்சாலைகள், கிராமங்கள்  மாவட்டத் தலைநகரங்களில் இருந்து  துண்டிக்கப்பட்டுள்ளன.

* உலக மக்கள்தொகை எண்ணிக்கை 800 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது.

* 2011-ஆம் ஆண்டு சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 10 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர். அதேபோன்ற வறட்சி நிலையை சோமாலியா இந்த ஆண்டும் எதிர்கொண்டுள்ளது. வரும் மாதங்களில் சோமாலியாவின் நிலைமை மேலும் மோசமாகலாம் என ஐ.நா. எச்சரிக்கை விடுத்துள்ளது.

* இந்தியாவுக்கு எதிரான தொடர்; கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிப்பு.

* இந்திய தேக்வாண்டோ (தற்காப்பு கலை) சம்மேளன தலைவராக ஐசரி கணேஷ் தேர்வு.

* 2022 பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் வரும் நவம்பர் 20-ந்தேதி முதல் டிசம்பர் 18-ந்தேதி வரை நடைபெற உள்ளது.


Today's Headlines

* 7.10 lakh people applied for addition of their names and correction.

* Water flow rises to 1,460 cubic feet in Balaru: Public were warned to avoid bathing in river

 * Average daily power demand in Tamil Nadu fell by 2,000 MW.

* Jail for non-cooperative officials to recover encroached temple lands: High Court warns.

* Heavy snowfall in Kashmir - highways, villages cut off from district capitals.

 * According to the United Nations, the world population has increased to 8 billion.

 * In 2011 famine in Somalia killed up to 10 lakh people.  Somalia is  facing a similar drought this year also.  The situation in Somalia could worsen in the coming months, the UN warner.

*  Series against India;  New Zealand team announced their team headed by Kane Williamson.

* Aysari Ganesh elected as president of Indian Taekwondo (Martial Art)

* The FIFA World Cup 2022 will be held in Qatar from November 20 to December 18.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி