பதவி உயர்வுக்கும் TET தேவை - அரசும் , சங்கங்களும் என்ன செய்யப் போகின்றன? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Nov 26, 2022

பதவி உயர்வுக்கும் TET தேவை - அரசும் , சங்கங்களும் என்ன செய்யப் போகின்றன?

பதவி உயர்வுக்கும் Tet தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அண்மையில் பெரும்பான்மை  ஆசிரியர்கள் தொடுத்த வழக்கில் மாண்பமை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

தீர்ப்புக்குப் பின் நமது மாண்புமிகு கல்வியமைச்சசர் அவர்கள் இதன் மேல் முறையீடு செய்யப்படும் எனப் பேட்டியில் கூறியிருந்தார்கள். இதன் முக்கியத்துவம் கருதி எந்த ஒரு கோரிக்கையும் வைக்காமல் தாமாகவே முன்வந்து ஆசிரியர் மனம் அறிந்து ஆசிரியர்கள் நலன் காக்க மேல்முறையீடு செய்யப்படும் என்று கூறினார்கள்.

சரி இதனால் என்ன பயன் என்று பார்ப்போம். 2003 க்கு
முன்னரெல்லாம் இடைநிலை ஆசிரியர்கள் 1 முதல் 8ம் வகுப்பு வரை பணியில் அமர்த்தப்பட்டனர். (தொடக்க, உயர்நிலை, மேல்நிலை) என அனைத்து தொகுதிகளிலும் நியமிக்கப்பட்டனர். அதன் பின்னர் போதிய பாடப்பொருளறிவு வேண்டும் என 6, 7, 8 வகுப்புகளில் நியமனம் செய்யப்படவில்லை.

சங்கங்களும் அதை பெரிதுபடுத்தாமல் விட்டு விட்டனர். பின்னர் பதவி உயர்வுக்கு தகுந்த கல்வித் தகுதியுடையோர்க்கு சங்கங்களின் முயற்சியால் பதவி உயர்வு வழங்கப்பட்டது. ஆனால் அதே சங்கங்கள் Tet தேர்ச்சி வேண்டும் எனும் போது யாரும் அதிகம் வாய்திற்ந்ததாக தெரியவில்லை. Tet தேர்ச்சி கட்டாயம் என்றால் அனைத்து சங்க உறுப்பினர்களிலும் 99% பேர் பதவி உயர்வு பெறுவதில் சிக்கல் ஏற்படும்.
இடைநிலை ஆசிரியர் ஆயுள் முழுவதும் இடைநிலை ஆசிரியராகவே இருப்பார். பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வில் சென்றால் தான் தலைமை ஆசிரியர் பணியிடம் ஏற்படும்.

வருகிற காலத்தில் தொடக்க, நடுநிலை உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர் பணிக்கும் தேர்வு எனும்  நிலையும் ஏற்படலாம்.

RMSA விரிவுபடுத்தப்படும் போது முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கும் Tet தேர்வு அவசியம் எனலாம். அப்போது அனைத்து ஆசிரியர் களுக்கும் பாதிப்பு ஏற்படும் போது உணர்ந்து என்ன பயன்?

மற்ற துறைகளை ஒப்பிடுகையில் கல்வித்துறையில் பதவி உயர்வு சொல்லும்படியில்லை. 

பிற துறைகளில் 10ம் வகுப்பு கல்வித் தகுதியுடன் பணியில் சேர்ந்த ஒருவர் Degree with துறைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அவர் தாசில்தார் வரை பதவி உயர்வு பெறலாம். அவரை கடினமான Group 2 எழுதச் சொல்வதில்லை.

நமக்கு கற்றுக் கொடுத்த ஆசிரியர் என்ன தகுதித் தேர்வு எழுதி வந்தார்? ஒன்றிய அரசின் இலக்கு 2030 க்குள் +2 முடித்த மாணவர்களில்  50% உயர் கல்வி பெற வேண்டும் என்பது. 

ஆனால் நம் தமிழ்நாடு எப்போதோ அந்த இலக்கை அடைந்து விட்டது. 

இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் நமது மாணவர்களும் ஆசிரியர்களும் எவ்வளவு முன்னேறியுள்ளனர் என்று .

முன்னரெல்லாம் ஒரு ஆசிரியர் Selection Grade பெற்றால் தனியான ஊதிய விகிதமாக இருந்தது. எனவே பதவி உயர்வை யாரும் எதிர்பார்ப்பதில்லை. 

ஆனால் தற்போது அப்படியில்லை.
தொடக்கக் கல்வித்துறை மட்டுமின்றி உயர்நிலைப்பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு இன்றியே 20 ஆண்டுகளைக் கடந்து விட்டனர். அவர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர் சங்கங்கள் மட்டுமின்றி பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர்களும் குரல் கொடுப்பது ஆசிரியர் சங்கங்களிடையே ஒற்றுமை இருப்பது  கண்டு ஒவ்வொரு ஆசிரி யருக்கும் மகிழ்ச்சியே. அனைத்து ஆசிரியர் சங்கங்களின் கடமை.

பதவி உயர்வு கலந்தாய்வுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. அதற்குள் இதற்கொரு தீர்வு எட்டப்படாவிடில் பலரின் பதவி உயர்வு கனவு பறிபோகும் அபாயம் உள்ளது.
மேலும் இதை நடைமுறைப்படுத்தினால்  பல்வேறு வினாக்கள் சட்ட சிக்கல்கள் ஏற்படும் .

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தான் பெற முடியவில்லை. அரசுக்கு அதிக நிதி இழப்பு ஏற்படாத இதற்காவது வழி ஏற்படுத்தலாமே.

இதற்கு ஒரே தீர்வு முன்னர் 2010ல் நியமனம் செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு Tet தேர்வில் விலக்கு அளித்தது போல் தற்போது வரை பணியில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருக்கும்  ஆசிரியர்களுக்கு பதவி உயர்வுக்கு Tet தேர்விலிருந்து விலக்களிக்க ஆவண செய்ய வேண்டும்.

இது அனைத்து சங்கங்களின் கடமையாகும் என ஆசிரியர்கள் கருதுகின்றனர்

6 comments:

  1. உங்கள் இணையதளத்தில் பதவி உயர்வுக்கு TET தேர்ச்சி தேவையா?
    என்று ஆசிரியர்கள் கேட்பது போல (விரும்புவதை) போல கட்டுரை ஒன்று வெளியிட்டுள்ளீர்கள்.

    ஒரு ஆசிரியர் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து பதவி உயர்வுக்கு ஒரு 82 மார்க்கு கூட எடுக்க முடியாதவர்கள்.

    ஆனால் 2013 2017 , 2019 தேர்ச்சி அடைந்தவர்கள் மீண்டும் ஒரு நியமன தேர்வை எழுதுவதற்கு ஏற்கனவே பள்ளியில் வேலை செய்யும் ஆசிரியர்கள் " நீங்கள் ஆசிரியர்கள் தானே இன்னொரு முறை எழுதக்கூடாதா? "
    என்று கேட்கிறீர்கள்.
    நியம தேர்வு எதிர்த்து பல கட்ட போராட்டங்களை நடத்தியும் உங்கள் இணையதளத்தில் ஒரு செய்தி கூட அது சம்பந்தமாக நீங்கள் வெளியிடவில்லை. இப்போது உங்களுக்கு தேர்வு என்றவுடன் ஐயோ ஐயோ என்று குதிக்கிறீர்கள்.

    ReplyDelete
  2. https://www.kalviseithi.net/2018/07/tet-13000.html?m=0

    https://www.kalviseithi.net/2022/10/tet_4.html?m=1

    https://www.kalviseithi.net/2015/04/21_15.html?m=1

    நீங்கள் நமது இணையத்தை இன்றுதான் பார்ப்பதாக தெரிவிகிறது. அனைவருக்கும் பொதுவான செய்தியே நமது இணையத்தில் வெளியிடப்படும்.

    ReplyDelete
  3. அரசும் சங்கங்களும் ஒன்னும் செய்ய வேண்டாம், அமைதியா இருந்தாலே போதும்... தகுதி உள்ளவங்களுக்கு பதவி உயர்வாவது கிடைக்கட்டும். கடைசி வரை சலுகையே சாம்ராஜ்யம் நடத்த வேணாம்..

    ReplyDelete
  4. Simply getting promotion is very difficult because world changing so past, the. Teacher how to adopt through only exam

    ReplyDelete
    Replies
    1. First you type the message without mistake idiot

      Delete
  5. 2001 ஆண்டே..

    The Gazette of India, Notification No. 238 of September, 4, 2001 NCTE (Determination of minimum qualifications for recruitment of teachers in schools) Regulations, 2001.
    மற்றும்
    National Council for Teacher Education F. No. 9-2/2001/NCTE I.G.I. Stadium, I,P. Estate New Delhi - 110 002 New Delhi, 3rd September, 2001 ல் வரிசை எண் 3 - ல்

    3. iii) For promotion of teachers from one level to the next level of teaching, minimum qualification as given in the Schedules for the concerned level would be required.

    என்று தெளிவாக கூறப்பட்டுள்ளது. எனவே தமிழகத்தில் RTE ACT - 2009 , 23.08.2010 அன்று நடைமுறைப்படுத்திய பிறகு அன்று முதல் 2021 வரை இடைநிலை ஆசிரியர் பணியில் இருந்து பட்டதாரி ஆசிரியராக பதிவு பெற்று பணிபுரியும் வரும் ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகுதி தேர்வு தேர்ச்சி என்பது பொருந்தும்.‌ இதை தற்போது சென்னை உயர் நீதிமன்றமும் உறுதிப்படுத்தியுள்ளது.
    அரசும், பள்ளிகளுக்கு துறையும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் நீதிமன்றத்தின் கதவுளை தட்டப்படும்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி