பள்ளி பொது தேர்வுகள் எழுத தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 22, 2022

பள்ளி பொது தேர்வுகள் எழுத தனித்தேர்வர்களுக்கு வாய்ப்பு

பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், வரும் 26ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா அறிவிப்பு:

நடப்பு கல்வி ஆண்டில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள், 2023 மார்ச் மற்றும் ஏப்ரலில் நடக்க உள்ளன. இவற்றில் பங்கேற்க விரும்பும் தனித்தேர்வர்கள், 'ஆன்லைன்' வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பிளஸ் 1 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத மற்றும் தேர்வுக்கு வராதவர்கள் அனைவரும், பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதவும், பிளஸ் 1ல் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதவும் விண்ணப்பிக்கலாம்.

வரும் 26ம் தேதி முதல் ஜன., 3 வரை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, அரசு தேர்வுகள் இயக்குனரக மாவட்ட சேவை மையங்களுக்கு சென்று, ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தேதிகளில் விண்ணப்பிக்க தவறுவோர், ஜன., 5 முதல் 7 வரை சேவை மையத்துக்கு சென்று, 'தத்கல்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

பிளஸ் 1, பிளஸ் 2 - 1,000; 10ம் வகுப்புக்கு 500 ரூபாய் என, தேர்வு கட்டணத்துடன் கூடுதலாக செலுத்த வேண்டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி