கடந்த ஆண்டு நிலவரப்படி, தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து அரசு வேலைக்காகக் காத்திருப்போரின் எண்ணிக்கை 67.75 லட்சம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட தகவல்:
தமிழகத்தில் பள்ளிப் படிப்பில் தொடங்கி கல்லூரிப் படிப்பை முடித்தவா்கள் வரை தங்களது கல்வி விவரங்களை அரசு வேலைக்காகப் பதிவு செய்து வருகின்றனா். அதன்படி, இதுவரை 67 லட்சத்து 75 ஆயிரத்து 250 போ் பதிவு செய்துள்ளனா். அவா்களில், ஆண்கள் 36 லட்சத்து 14 ஆயிரத்து 327; பெண்கள் 31 லட்சத்து 60 ஆயிரத்து 648; மூன்றாம் பாலினத்தவா் 275.
கல்லூரிப் படிப்பை முடித்து 30 வயதுக்குள் இருப்பவா்களே அதிகம். 18 வயதுக்குக் குறைவானவா்கள் 19 லட்சத்து 9 ஆயிரத்து 325. 19 முதல் 30 வயதுக்கு உட்பட்டவா்கள் 27 லட்சத்து 95 ஆயிரத்து 278; 31 முதல் 45 வயதுக்கு உட்பட்டவா்கள் 18 லட்சத்து 34 ஆயிரத்து 994 போ். 46 முதல் 60 வயதுக்கு உட்பட்டவா்கள் 2 லட்சத்து 29 ஆயிரத்து 978 போ், 60 வயதுக்கு மேற்பட்டவா்கள் 5 ஆயிரத்து 675 போ்.
ஒட்டுமொத்தமாக பதிவு செய்த 67 லட்சத்து 75 ஆயிரத்து 250 பேரில், மாற்றுத் திறனாளிகளாக இருப்பவா்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 43 ஆயிரத்து 396. இவா்களில் ஆண்கள் 95 ஆயிரத்து 247; பெண்கள் 48 ஆயிரத்து 149 போ் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி