ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் லட்சுமி பிரியா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வி உதவித் தொகைக் கான இணையதளம் https://tnadtwscholarship.tn.gov.in/ இந்தாண்டு ஜன.30ல் திறக்கப்பட்டது. நேற்றுமுன்தினம் வரை மூன்று லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்.
விதிமுறைகளின்படி நடப்பு கல்வியாண்டு முதல் விண்ணப்பத்துடன் இணைக்கப்பட்ட ஜாதி சான்று வருமானச் சான்று ஆதாருடன் இணைக்கப்பட்ட சேமிப்பு கணக்கு எண் ஆகிய அனைத்து ஆவணங்களும் இணைய வழியில் சரி பார்க்கப்படும்.
இணையதளத்தில் கல்வி உதவித்தொகை பெற எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது தொடர்பாக 'வீடியோ' வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த திட்டத்தின்கீழ் விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி