உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஏப். 11-ல் பணி நிரவல் கலந்தாய்வு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2023

உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஏப். 11-ல் பணி நிரவல் கலந்தாய்வு

 

பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:


தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இதற்காக கடந்த ஆக.1-ம் தேதி நிலவரப்படி உள்ளஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) பணியிடங்கள் நிர்ணயம் செய்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து அறிக்கையாக பெறப்பட்டுள்ளது.


அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 3,123 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 407 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் 400 மாணவர்களுக்கு மேல் இருக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் நிலை-1 பதவியில் ஆசிரியர்கள் பணியாற்று கின்றனர்.


183 பள்ளி களில் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பதவியில் ஆசிரியர்கள் இல்லை. ஆனால், 400-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள 163 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். எனவே, விதிகளின்படி உபரியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் அடிப்படையில் இடமாறுதல் செய்யப்படுவர்.


இதற்கான கலந்தாய்வு, ஏப்.11-ம் தேதி இணையவழியில் நடத்தப்படும். பணி நிரவல் கலந்தாய்வுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். எந்த வித புகாருக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வை நடத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

1 comment:

  1. எல்லா பணியிடங்களிலும் தொகுப்பு ஊதியம் வழங்கி வந்தது கடந்த அதிமுக அரசு. இனி விடியல் கிடைக்கும் என்று நம்பி வாக்குகள் அளித்தோம். இப்போதும் அதைவிட மிகவும் மோசமாகி அனைத்து துறைகளிலும் ஒப்பந்த அடிப்படையில் பணி நியமனம் நடக்கிறது. படித்தவர்கள் குடும்பம் நடத்த முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையை இந்த அரசும் செய்வது வேதனையானது. தகுதி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வாழ்க்கை வீணாகிவிட்டது. பத்தாண்டு காலம் எவ்வித நியமனமும் செய்யாமல் இப்போது மீண்டும் தேர்வு.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி