பாரதிதாசன் பல்கலை. மாணவர்கள் ஜூன் 30-க்குள் அரியரை முடிக்க கெடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 15, 2023

பாரதிதாசன் பல்கலை. மாணவர்கள் ஜூன் 30-க்குள் அரியரை முடிக்க கெடு

 

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வு நெறியாளர்(பொறுப்பு) எஸ்.சீனிவாச ராகவன் வெளியிட்டுள்ள அறிக்கை: பல்கலைக்கழக மானியக் குழுவின் வழிகாட்டுதலின்படி, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு ஒப்புதலுடன்


2018- 2019-ம் கல்வியாண்டு மற்றும் அதற்கு முந்தைய காலகட்டத்தில், இளநிலை மற்றும் முதுநிலை பாடங்களில் சேர்ந்த மாணவர்கள் தங்களது படிப்பை முடித்துக் கொள்ள 5 ஆண்டுகள் காலக்கெடு அளிக்கப்பட்டது. இந்தக் காலக்கெடு ஜூன் 30-ம் தேதி முடிவடைய உள்ளது.


எனவே, பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்குட்பட்ட கல்லூரிகளில் 2018- 2019-ம் கல்வியாண்டில் படித்த மாணவர்கள் அரியர் வைத்திருந்தால், கடைசி வாய்ப்பாக ஏப்ரல் இறுதியில் நடக்கவுள்ள தேர்வை எழுதிக்கொள்ளலாம். இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் www.bdu.ac.in என்ற இணையதளத்தில் தேர்வு விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து ஏப்.20-ம் தேதிக்குள் தாங்கள் பயின்ற கல்லூரி வழியாக விண்ணப்பம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி