முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை தேர்வுக்கு, வரும், 15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக கல்லுாரி மாணவர்களின் ஆராய்ச்சி திறனை மேம்படுத்த, முதல்வரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, கலை, மனிதநேயம், சமூக அறிவியல் பிரிவில், 60; அறிவியல் பிரிவில், 60 மாணவர்களுக்கு, ஆராய்ச்சி ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
மாதம், 25,000 ரூபாய் வீதம், 2 ஆண்டுகளுக்கும்; அதன்பின், மாதம், 28,000 ரூபாய் வீதம், 12 மாதங்களுக்கும் ஊக்கத்தொகை வழங்கப்படும்.இதற்கு, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியே தகுதி தேர்வு நடத்தப்படுகிறது. இதற்கான அறிவிப்பு, https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் வரும், 15ம் தேதிக்குள் விண்ணப்ப பதிவு மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி