கோவையில் பள்ளி மாணவிகள் மறியல் போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 19, 2023

கோவையில் பள்ளி மாணவிகள் மறியல் போராட்டம்

 

கோவை ராஜ வீதியில் உள்ள துணி வணிகர் சங்க அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1,800-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர்.


இப்பள்ளியில் கழிவறைகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என கூறி, நேற்று மாலை பள்ளி முடிந்த பின்னர் வெளியே வந்த மாணவிகள், பெற்றோருடன் ராஜவீதியில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த வெரைட்டிஹால் சாலை போலீஸார் மற்றும் மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் அங்கு வந்து மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.


கழிவறைகளை முறையாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, மாணவிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். சுமார் ஒரு மணி நேரம் நடந்த மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி