பள்ளிக் கல்வி - சிறப்பாசிரியர்களுக்கான மதிப்பூதியம் உயர்த்தி அரசாணை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Dec 13, 2023

பள்ளிக் கல்வி - சிறப்பாசிரியர்களுக்கான மதிப்பூதியம் உயர்த்தி அரசாணை வெளியீடு.

 

பள்ளிக் கல்வி - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் தொடக்கக் கல்வி நிலையில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் மதிப்பூதியம் ரூ .20,000 / -லிருந்து ரூ .25,000 / - ஆக உயர்த்துதல் -ஆணை வெளியிடப்படுகிறது.

 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி , மாநிலத் திட்ட இயக்குநர் தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்ட மாற்றுத்திறன் மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் ( தொடக்கக் கல்வி ) சங்கத்தின் சார்பில் தங்களது மதிப்பூதியத்தினை ரூ .20,000 / -லிருந்து ரூ .25,000 / - ஆக உயர்த்தி வழங்கிடவும் , காலமுறை ஊதியம் வழங்கிடவும் , பணியினை நிரந்தரம் செய்திடவும் தொடர்ந்து கோரிக்கைகள் அளித்து வருகின்றனர்.


 தமிழ்நாட்டில் , மாற்றுத்திறன் மாணவ , மாணவிகளின் நலன் கருதி , குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் , 2009 இன்படி , மாற்றுத்திறனுடைய பள்ளி வயதில் உள்ள அனைத்து மாணவ , மாணவிகளும் அருகாமையில் உள்ள பள்ளியில் சேர்க்கை அளித்தும் அவர்களின் மாற்றுத்திறன் தன்மையை பொறுத்து அவர்களுக்கான சிறப்புக் கல்வியும் , சிகிச்சை 1 பயிற்சிகளும் சிறப்பு பயிற்றுநர்களால் ஆயத்த பயிற்சி மையங்களில் வழங்கப்பட்டு வருகின்றன.


 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியில் தற்பொழுது தொடக்கக் கல்வி நிலையில் 1995 சிறப்பு பயிற்றுநர்கள் மற்றும் இயன்முறை மருத்துவர்கள் பணியாற்றி வருகிறார்கள் . தொடக்கக் கல்வி நிலையில் பணியாற்றும் சிறப்பு பயிற்றுநர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மதிப்பூதியம் குறித்து பின்வரும் விவரங்களை தெரிவித்துள்ளார் .


GO NO : , DATE : 07.12.2023 - Download here

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி