மத்திய அரசு நடத்திய அடிப்படை எழுத்தறிவு தேர்வில் தமிழ்நாடு 100 சதவீத தேர்ச்சி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 4, 2025

மத்திய அரசு நடத்திய அடிப்படை எழுத்தறிவு தேர்வில் தமிழ்நாடு 100 சதவீத தேர்ச்சி

வயது வந்தோருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை உருவாக்குவதற்காக மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் உள்ள பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவு துறை சார்பில் நாடுதழுவிய அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.


எழுத்தறிவு இல்லாத 1 கோடியே 77 லட்சம் பேர் பதிவு செய்திருந்தனர். அவர்களுக்கு பயிற்சி அளித்து தேர்வு நடத்தப்பட்டது. அதில், 34 லட்சத்து 31 ஆயிரம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்று சான்றிதழ் பெற்றனர். இவர்களில், தமிழ்நாட்டில் பதிவு செய்திருந்த 5 லட்சத்து 9 ஆயிரத்து 694 பேருக்கும் சான்றிதழ் அளிக்கப்பட்டது.


எனவே, 100 சதவீத தேர்ச்சி பெற்று, முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது. திரிபுரா, டெல்லி ஆகியவை 2 மற்றும் 3-வது இடங்களை பிடித்துள்ளன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி