ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிக்கான போட்டித் தேர்வில் தமிழ் தகுதித்தாள், பொது அறிவு மற்றும் பாடங்கள் வாரியான நடத்தப்படும் தேர்வுகளிந் தேதிகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் (நேர்முகத்தேர்வு உள்ள பதவிகள்) துணை இயக்குநர் (சட்டம்) புள்ளியியல் மற்றும் பகுப்பாய்வு உதவி இயக்குநர், மேலாளர் (சுரங்கம்) துணை மேலாளர் (சுற்றுச்சூழல்), வனத்துறை விஞ்ஞானி (கிரேடு-3) தலைமைச் செயலக நிருபர் (ஆங்கிலம் மற்றும் தமிழ்), உளவியலாளர், முதுநிலை பூச்சியியலாளர், சமூகவியாளர், கால்நடை உதவி மருத்துவர் உள்பட 30 வகையான பதவிகளில் 330 காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த மே 7-ம் தேதி வெளியிட்டது.
இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு மே 13-ம் தேதி தொடங்கி ஜூன் 11-ம் தேதி முடிவடைந்தது. வெவ்வேறு பதவிகளுக்கான தேர்வுகள் ஜூலை 20 முதல் 23-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பில் பொதுவாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில், தமிழ் மொழி தகுதித்தாள், பொது அறிவுத்தாள் மற்றும் வெவ்வேறு பாடங்களுக்கான தேர்வுத் தேதி, நேரம் தொடர்பான விவரங்களை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, அனைத்து பதவிகளுக்கும் பொதுவான தமிழ் மொழி தகுதித்தாள் தேர்வு மற்றும் பொது அறிவுத்தாள் தேர்வு ஜூலை 20-ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை நடைபெறும். அன்றைய தினம் மதியம் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்பர்மேஷன் டெக்னாலஜி, எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடங்களுக்கான தேர்வு நடைபெறும்.
ஆங்கில சுருக்கெழுத்து தேர்வு ஜூலை 21-ம் தேதி காலை 9.30 மணி முதல் 11 மணி வரையும் கால்நடை மருத்துவம், படோ-டெக்னாலஜி, சட்டம், வணிக நிர்வாகம், விலங்கியல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் நடைபெறும். அதே நாளில் தமிழ் சுருக்கெழுத்து தேர்வு பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரையும் உளவியல், புள்ளியியல் மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும்.
தொல்லியல், கல்வெட்டியல், வரலாறு, கெமிக்கல், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடங்களுக்கான தேர்வு ஜூலை 22-ம் தேதி காலை 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும் சமூகவியல், நகர் ஊரமைப்பு திட்டமிடல் உள்ளிட்ட பாடங்களுக்கான தேர்வுகள் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையும் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி