பொறியியல் மாணவர்களுக்கான முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளுக்கு 3-ம் சுற்று கலந்தாய்வு ஆகஸ்ட் 7 முதல் 20-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. அத்துடன் பொறியியல் சேர்க்கை கலந்தாய்வு முடிவடைகிறது.
இந்நிலையில் பல்கலை.யின் 4 வளாக கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 11-ல் தொடங்கி டிசம்பர் 10-ம் தேதி வரை நடத்தப்படும். அதற்குமுன் மாணவர்களுக்கான அறிமுக வகுப்புகள் ஆகஸ்ட் 5 முதல் 9-ம் தேதி வரை நடைபெறும்.
இதேபோல், பல்கலை. இணைப்பு அங்கீகாரம் இதர கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்புகள் ஆகஸ்ட் 18 முதல் டிசம்பர் 10-ம் தேதி வரையும், இவர்களுக்கான அறிமுக வகுப்புகள் ஆகஸ்ட் 11 முதல் 14-ம் தேதி வரை நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி