6 முதல் 9-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கப் பயிற்சி: மாணவர்களுக்கு வாரம்தோறும் தேர்வு நடத்த உத்தரவு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 4, 2025

6 முதல் 9-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் திறன் இயக்கப் பயிற்சி: மாணவர்களுக்கு வாரம்தோறும் தேர்வு நடத்த உத்தரவு

 

அரசுப் பள்​ளி​களில் திறன் இயக்​கத்​தில் பயிற்சி பெறும் மாணவர்​களுக்கு வாரம்​தோறும் வெள்​ளிக்​கிழமை தேர்​வு​கள் நடத்​தப்பட வேண்​டும் என்று பள்​ளிக்​கல்​வித் துறை தெரி​வித்​துள்​ளது.


இதுதொடர்​பாக பள்​ளிக் கல்​வித் துறை இயக்​குநரகம் சார்​பில், அனைத்து மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர்​களுக்கு அனுப்​பப்​பட்​டுள்ள சுற்​றறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: அரசுப் பள்​ளி​களில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்​களின் மொழிப்​பாடம் மற்​றும் கணிதத் திறனை மேம்​படுத்​தும் வகை​யில் ‘திறன்’ எனும் இயக்​கம் 6 மாதம் மேற்​கொள்​ளப்பட உள்​ளது. இந்த திறன் இயக்​கம் பள்​ளி​களில் சிறப்​பாக செயல்​படுத்​தப்பட வேண்​டும். திறன் இயக்க மாணவர்​கள் தனி​யாக அமர வைக்​கப்​பட்டு வகுப்​பறைச் செயல்​பாடு​கள் தொடங்​கப்​பட்​டிருக்க வேண்​டும்.


அந்த வகை​யில் மாணவர்​களுக்கு அடிப்​படை கற்​றல் தேர்வு நடத்​தப்பட வேண்​டும். அதில் தமிழ், ஆங்​கிலம் மற்​றும் கணித பாடங்​களின் மதிப்​பெண்​கள் அடிப்​படை​யில் மாணவர்​களைச் சேர்த்து பயிற்சி தரவேண்​டும். வகுப்​பு​களுக்கு தலா 90 நிமிடம் வீதம் 30 நாட்​கள் பயிற்​று​விக்க வேண்​டும்.


இதுத​விர வாரம்​தோறும் வெள்​ளிக்​கிழமை, அந்த வாரத்​தில் நடத்​தப்​பட்ட பாடங்​களில் இருந்து 10 மதிப்​பெண்​களுக்கு தேர்​வு​களை நடத்த வேண்​டும். ஒரு பாடத்​தலைப்பு முடிந்த பின்பு அதற்​கான பயிற்​சித்​தாள் செய்​வதை​யும் தலைமை ஆசிரியர் உறுதி செய்ய வேண்​டும். இதற்​கான ஆசிரியர் கையேடு மற்​றும் மாணவர் பயிற்சி புத்​தகம் பள்​ளி​களுக்கு வழங்​கப்​படும். மேலும், இது​சார்ந்த வழி​முறை​களை பின்​பற்றி திட்​டத்தை சிறப்​பாக செயல்​படுத்த வேண்​டும். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி