இலக்​கி​யத் திறனறி தேர்வு: செப்​டம்பர் 4 வரை விண்ணப்பிக்கலாம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Aug 25, 2025

இலக்​கி​யத் திறனறி தேர்வு: செப்​டம்பர் 4 வரை விண்ணப்பிக்கலாம்

தேர்​வுத்​துறை இயக்​குநரகம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்பு: தமிழ் மொழி இலக்​கி​யத் திறனை மேம்​படுத்​திக் கொள்ளும் வகையில் அரசு அங்கீ​காரம்


பெற்ற அனைத்து வித​மான பள்​ளி​களி​லும் (சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உட்​பட) பிளஸ் 1 பயிலும் மாணவர்​களுக்கு தமிழ் மொழி இலக்​கிய திறனறித் தேர்வு நடத்​தப்​படு​கிறது. இந்த தேர்​வில் 1,500 மாணவர்​கள் தேர்வு செய்​யப்​பட்டு மாதந்​தோறும் ரூ.1,500 வீதம் 2 ஆண்​டு​களுக்கு ஊக்​கத் தொகை வழங்​கப்​படும்.


நடப்​பாண்​டுக்​கான திற​னறித் தேர்வு அக்​டோபர் 11-ல் நடை​பெறவுள்​ளது. இதற்கான விண்​ணப்​பங்​களை www.dge.tn.gov.in என்ற வலைத்​தளத்தில் பதி​விறக்​கம் செய்து கொள்​ளலாம். பூர்த்தி செய்த விண்​ணப்​பங்​களை தேர்​வுக் கட்​ட​ணம் ரூ.50 சேர்த்து சம்​பந்​தப்​பட்ட பள்​ளித் தலைமை ஆசிரியரிடம் செப்​டம்​பர் 4-ம் தேதிக்​குள் ஒப்​படைக்க வேண்​டும்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி