பள்ளி மாணவர்களின் முழு ஆண்டுத் தேர்வு மதிப்பெண்களை எமிஸ் தளத்தில் ஏப்.30-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய தொடக்கக் கல்வி இயக்குநர் நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு (தொடக்கக் கல்வி) அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தொடக்கக் கல்வி இயக்ககத்தின்கீழ் செயல்படும் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 3-ம் பருவ மதிப்பீடு மற்றும் முழு ஆண்டுத் தேர்வுகள் நடைபெற்றுள்ளன.
இத்தேர்வுகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் மதிப்பெண்களை ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் ஏப்.30-ம் தேதிக்குள் ‘எமிஸ்’ தளத்தில் பதிவேற்றம் செய்து, மாணவர் தேர்ச்சி அறிக்கைக்கு வட்டாரக் கல்வி அலுவலர்களிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
நடப்பு (2025-26) கல்வி ஆண்டில் கற்றல் செயல்பாட்டை நிறைவு செய்யும் மாணவர்களை அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி அளிப்பது. மாற்றுச் சான்றிதழ் வழங்கும் பணியை மே 11-ம் தேதி முதல் எமிஸ் தளம் மூலம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி