அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறை பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 27, 2026

அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறை பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் வெளியீடு

 

அரசு பள்​ளி​களில் உள்ள திறன்​மிகு வகுப்​பறை​கள், கணினிகள் ஆகிய​வற்​றின் பாது​காப்​பு, பராமரிப்​புக்​கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக் கல்​வித்​துறை வெளி​யிட்​டுள்​ளது.

தமிழகத்​தில் 22,418 அரசு தொடக்​கப் பள்​ளி​களில் திறன்​மிகு வகுப்​பறை​கள் ஏற்​படுத்​தப்​பட்​டுள்​ளன. அதே​போல் 6,992 அரசு நடுநிலைப் பள்​ளி​களில் உயர் தொழில்​நுட்ப ஆய்​வகங்​கள் நிறு​வப்​பட்​டுள்​ளன.

திறன்​மிகு வகுப்​பறைக்​காக ஒலி-ஒளி அமைப்​பு​கள், இன்​ட​ராக்​டிவ் பிளாட் பேனல்​கள், டிஜிட்​டல் கற்​றல் மேலாண்மை அமைப்​பு​கள் (எல்​எம்​எஸ்) பயன்​படுத்​தப்​படு​கின்​றன. அனைத்து பள்​ளி​களுக்​கும் தடையற்ற இணைய சேவை வழங்​கப்​பட்டு வரு​கிறது.

பள்​ளி​களில் ஏற்​படுத்​தப்​பட்​டுள்ள திறன்​மிகு வகுப்​பறை​கள் பாடப் பகு​தி​களை வீடியோக்​கள், முப்​பரி​மாண(3-டி) அனிமேஷன் மூலம் எளிமை​யாகப் புரிந்​து​கொள்​ள​வும், மாணவர்​களின் கவனத்தை ஈர்க்​க​வும் உதவுகிறது.

இந்த நிலை​யில் கோடை விடு​முறை​யில் திறன்​மிகு வகுப்​பறை​களின் பாது​காப்​பு, பராமரிப்​புக்​கான வழி​காட்​டு​தல்​களை பள்​ளிக் கல்​வித் துறை வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, பள்​ளி​களில் உள்ள கணினி, திறன் பலகை ஆகிய​வற்றை முறை​யாக ஸ்விட்ச் ஆஃப் செய்ய வேண்​டும். அதே​நேரத்​தில் ட்ரிப்​பர், கண்​காணிப்பு கேம​ரா, யுபிஎஸ், மின் இணைப்பு மீட்​டர் ஆகிய​வற்​றின் பொத்​தான்​களை அணைக்​கக் கூடாது.

கோடை மழை பெய்​யும் வாய்ப்பு உள்​ள​தால், மழைச் சாரல் திறன் வகுப்​பறை​யில் படாத​வாறு கதவு மற்​றும் ஜன்​னல்​கள் முழு​மை​யாக மூடி வைக்க வேண்​டும்.

மேலும் இணைய இணைப்பு மற்​றும் மோடம் ஆகிய​வற்​றை​யும் ஸ்விட்ச் ஆஃப் செய்​யக் கூடாது. இவை அனைத்து நாட்​களி​லும் 24 மணி நேர​மும் செயல்​படும் நிலை​யில் இருக்க வேண்​டும். இவ்வாறு வழிகாட்டுதல்களில் அறி​வுறுத்​தப்​பட்​டுள்ளது

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி